search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முள்ளுக்குறிச்சியில் கல்லூரி மாணவிகள் நடத்திய வேளாண் கண்காட்சி
    X

    முள்ளுக்குறிச்சியில் கல்லூரி மாணவிகள் நடத்திய வேளாண் கண்காட்சி

    • இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகளின் ‘உழன்றும் உழவே தலை’ எனும் தலைப்பில் வேளாண் கண்காட்சி நடைபெற்றது.
    • இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    வாழப்பாடி:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே முள்ளுக்குறிச்சி மாரியம்மன் கோவில் வளாகத்தில் ஊரக வேளாண் பணி அனுபவம் பெரும் இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகளின் 'உழன்றும் உழவே தலை' எனும் தலைப்பில் வேளாண் கண்காட்சி நடைபெற்றது.

    கூட்டுறவு கடன் சங்க செயலர் ஆண்டி, முதல்வர் துரைராஜ் மற்றும் உதவி பேராசிரியர்கள் வழிகாட்டுதலின்படி, இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவு கடன் சங்க தலைவர் வையாபுரி மற்றும் காசி, சிவகாமி, பரமேஸ்வரி, பாலசந்தர் மற்றும் சரவணகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

    மாணவிகள், செல்வ ஈஸ்வரி, ஷாலினி, சாந்தப்பிரியா , சாந்தினி, சினேகா, சௌமியா, சுப்ரியா, சுஷ்மிதா, திருவாசுகி மற்றும் விவேகாஸ்ரீ ஆகியோர், பொம்மலாட்டம், இயற்கை உணவு கண்காட்சி மற்றும் வேளாண் தொழில்நுட்ப கண்காட்சி செயல் விளக்கம் அளித்தனர். முள்ளுக்குறிச்சி சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கண்காட்சி கண்டுகளித்து பயனடைந்தனர்.

    Next Story
    ×