search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையம் அருகே  அ.தி.மு.க. பேனர்கள் கிழிப்பு
    X

    கிழிக்கப்பட்ட அ.தி.மு.க. பேனர்.

    ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. பேனர்கள் கிழிப்பு

    • நீர் மோர் பந்தல் திறப்பு விழாவை முன்னிட்டு அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது
    • அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களை மர்ம நபர்கள் கிழித்து சென்றது தெரியவந்தது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழாவை முன்னிட்டு அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது.

    பேனர் கிழிப்புஇதனை தொடர்ந்து இன்று காலை விழா நடைபெறும் இடத்திற்கு அ.தி.மு.க.நிர்வாகிகள் வந்தபோது அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களை மர்ம நபர்கள் கிழித்து சென்றது தெரியவந்தது. இத்தகவல் அறிந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டனர் . பேனரை கிழித்த மர்ம நபர்கள் யார் ? எதற்காக கிழித்தார்கள் என தெரியவில்லை. தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் விசாரணை நடத்தினர். மேலும் யார் பேனரை கிழித்து சென்றார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரெட்டிச்சா வடி போலீஸ் நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த பேனர்களை மர்ம நபர்கள் கிழித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×