search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம் அருகே ரூ.7 லட்சம் மதிப்பில் புதிய பஸ் நிறுத்தம் - மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.  பூமி பூஜையை தொடங்கி வைத்தார்
    X

    எட்டயபுரம் நடுவிற்பட்டி கிராமத்தில் புதிய பஸ் நிறுத்த பூமி பூஜை பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    விளாத்திகுளம் அருகே ரூ.7 லட்சம் மதிப்பில் புதிய பஸ் நிறுத்தம் - மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பூமி பூஜையை தொடங்கி வைத்தார்

    • எட்டையபுரம் நடுவிற்பட்டி பகுதியில் இருந்த பஸ் நிறுத்தம், சாலை விரிவாக்க பணியின் போது அகற்றப்பட்டது.
    • ரூ.7 லட்சம் மதிப்பில் புதிய பஸ் நிறுத்தம் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே எட்டையபுரம் நடுவிற்பட்டி பகுதியில் இருந்த பஸ் நிறுத்தம், சாலை விரிவாக்க பணியின் போது அகற்றப்பட்டது. இதையடுத்து பஸ் நிறுத்தத்தை மீண்டும் அதே இடத்தில் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 -லட்சம் மதிப்பில் புதிய பஸ் நிறுத்தம் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு எட்டையபுரம் பேரூராட்சி மன்ற நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், துணைத் தலைவர் கதிர்வேல், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூமி பூஜையை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார். மேலும் கட்டுமான பணிகளை விரைவில் முடித்திட அதிகாரியிடம் அறிவுறுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து எட்டையபுரம் நடுவிற்பட்டி15-வது வார்டில் ரூ. 11 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையத்திற்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணியினை மார்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கோவில்பட்டி எட்டையபுரம் நகரச் செயலாளர் பாரதி கணேசன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மகேந்திரன், தி.மு.க வார்டு செயலாளர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×