search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    99 மற்றும் 100-வது வார்டில்   நாளை முதல் 3 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
    X

    99 மற்றும் 100-வது வார்டில் நாளை முதல் 3 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

    • குழாய் அமைக்கும் பணியால் நடவடிக்கை
    • பாலம் புதுப்பித்து கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

    கோவை,

    கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 99 மற்றும் 100-க்கு உட்பட்ட பகுதிகளுக்கு 1 திட்டத்தின் கீழ் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் இருந்து குடிநீர் பெறப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.

    மேற்கண்ட குடிநீர் கொண்டு வரும் பிரதான குழாய் சிங்காநல்லூர், வெள்ளலூர் சாலை வழியாக மேட்டூர் கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வரை அமைக்கப்பட்டு உள்ளது.

    மேற்படி சாலையில் நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள தரைமட்ட பாலம் புதுப்பித்து கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இப்பணியின் காரணமாக இப்பாலத்தின் மீது உள்ள குடிநீர் குழாயை மாற்றியமைக்க வேண்டியுள்ளதால் சாலையின் இருபுறமும் புதிதாக வினியோக குழாய் அமைக்கப்பட்டு உள்ளது.

    புதிதாக அமைக்கப்பட்ட குழாயினை ஏற்கனவே உள்ள வினியோக குழாயில் இணைப்பு ஏற்படுத்தும் பொருட்டு வருகிற 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை குடிநீர் நிறுத்தம் செய்யப்பட வேண்டியுள்ளது.

    எனவே வார்டு எண் 99 மற்றும் 100-க்கு உட்பட்ட பகுதிகளுக்கு 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை 3 தினங்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×