search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்ன சேலத்தில்  ஆட்டோவை எரித்த 2 வாலிபர்கள் கைது
    X

    எரிக்கப்ட்ட ஆட்டோவை படத்தில் காணலாம்.

    சின்ன சேலத்தில் ஆட்டோவை எரித்த 2 வாலிபர்கள் கைது

    • சின்ன சேலத்தில் ஆட்டோவை எரித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் நைனார்பாளையம் செல்லும் சாலையில் உள்ள காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த ரதிஷ் (22) என்பவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு ராகேஷ் (20) என்ற சகோதரர் உள்ளார். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதியான தீபாவளி அன்று பட்டாசு வாங்குவதற்காக ரதிஷும், ராகேஷும் சின்னசேலம் பேரூராட்சி எதிரே நின்று கொண்டிருக்கும் பொழுது அந்த வழியாக வந்த சின்னசேலம் அருந்ததியர் தெருவை சேர்ந்த கனி என்கின்ற கனியழகன் (20) என்கின்ற விஜயபுரத்தை சேர்ந்த ஆனந்த் (20) என்பவரும் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. பின்பு இரு தரப்பி னரிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.

    பின்னர் இரு தரப்பினரும் வீட்டுக்கு சென்று விட்டனர். இதை மனதில் வைத்துக் கொண்டு மதியம் ஒரு மணிக்கு ரதிஷ் வீட்டிற்கு நேரடியாக கனியும் ஆனந்தும் சென்றதாக கூறப்படுகிறது. ஆட்டோவில் படுத்திருந்த ராகேஷ் என்பவரை எழுப்பி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சண்டையை விளக்க வந்த ரதிஷையும் தாக்க முயன்று ள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் உயிருக்கு பயந்து இருவரும் அங்கிருந்து தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டில் நின்று கொண்டிருந்த ஆட்டோவின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சின்னசேலம் காவல் நிலையத்தில் ரதிஷ் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து நேற்று கனி மற்றும் ஆனந்த் இருவரையும் கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×