கடலூரில் 108 ஆம்புலன்சில் உயிர்காக்கும் மருந்து பெட்டகம்: கலெக்டர் வழங்கினார்

இத்திட்டத்தின் கீழ் 144 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர். சிகிச்சை வழங்கப்பட்டு அனைவரும் தற்போது நலமுடன் உள்ளனர்.
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 108 ஆம்புலன்சில் உயிர்காக்கம் மருந்து பெட்டக திட்டத்தினை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 108 ஆம்புலன்சில் உயிர்காக்கம் மருந்து பெட்டக திட்டத்தினை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
Published on

கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் 108 ஆம்புலன்சில் உயிர்காக்கும் மருந்து பெட்டகம் திட்டத்தினை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் 144 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர். இதில் 19 பேருக்கு இருதய ரத்த குழா யில் அடைப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 7 நபர்களுக்கு ஆஞ்சியோகிராம் பரிசோ தனை மேற்கொள்ளப்பட்டு ஒருவருக்கு இருதய ரத்த குழாயில் ஸ்டென்ட் வைக்கப்பட்டுள்ளது. மற்ற வர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு அனைவரும் தற்போது நலமுடன் உள்ளனர்.

மேலும் மாரடைப்பு அறிகுறிகளுடன் பயனாளிகள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து அங்கு இருதய பாதுகாப்பு மருந்து கள் வழங்கப்பட்டு மேல் சிகிக்சைக்காக மருத்து வமனைகளுக்கு அழைத்து செல்லப்படுவதால் கால தாமதம் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு துரித சிகிச்சை அளிப்பதற்காக இந்த மருந்துகள் அடங்கிய பெட்ட கங்களை 108 ஆம்பு லன்சில் வைத்து கால தாம தத்தை தவிர்க்க வழங்கப் பட்டது. இந்த சேவையை பயன்படுத்தி பொது மக்க ளின் உயிர் காக்குமாறு 108 ஒருங்கிணைப்பாளர்க ளுக்கு அறிவுரை வழங்கப் பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com