உலக தமிழ் அறிஞர்கள் பங்குபெறும் ஆய்வு மாநாடு - முதல்வர் பழனிசாமி துவக்கிவைக்கிறார்

உலக தமிழ் அறிஞர்கள் பங்குபெறும் தமிழ் வளர்ச்சி குறித்த ஆய்வு மாநாடு நாளை துவங்க இருப்பதாகவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கிவைப்பார் எனவும் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். #Pandiarajan #TNCM #EdappadiPalaniswami
உலக தமிழ் அறிஞர்கள் பங்குபெறும் ஆய்வு மாநாடு - முதல்வர் பழனிசாமி துவக்கிவைக்கிறார்
Published on

சென்னை:

லெமூரியா கண்டத்தில் இருந்து தமிழ் வளர்ச்சி குறித்த, உலகத் தமிழறிஞர்கள் ஆய்வு மாநாடு நாளை கன்னியாகுமரியில் துவங்க இருக்கிறது.

இரு நாட்கள் நடைபெறும் இந்த ஆய்வு மாநாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளதாகவும், கேரள ஆளுநர் சதாசிவம் கலந்துகொள்ள இருப்பதாகவும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

குமரி - லெமூரியா உலக தமிழ் ஆய்வு மையத்தின் சார்பில் நடைபெறும் இந்த ஆய்வு மாநாட்டில் 20 நாடுகளை சேர்ந்த உலகத் தமிழறிஞர்கள் பங்குபெறுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். #Pandiarajan #TNCM #EdappadiPalaniswami

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com