விருகம்பாக்கத்தில் கூவம் ஆற்றில் மிதந்த பச்சிளம் குழந்தை உடல்

விருகம்பாக்கத்தில் கூவம் ஆற்றில் மிதந்த பச்சிளம் குழந்தை உடலை கைப்பற்றிய போலீசார் குழந்தை கொலை செய்யப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருகம்பாக்கத்தில் கூவம் ஆற்றில் மிதந்த பச்சிளம் குழந்தை உடல்
Published on

போரூர்:

விருகம்பாக்கம், காளியம்மன் கோவில் தெரு கூவம் ஆற்றுபாலம் பகுதியில் இன்று காலை பச்சிளம் குழந்தை உடல் மிதந்து வந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். கோயம்பேடு போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அது ஆண் குழந்தை என்பதும் தொப்புள் கொடியுடன் இருப்பதும் தெரிந்தது. குழந்தை பிறந்த உடனேயே அதனை கூவம் ஆற்றில் வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

குழந்தையின் உடல் உப்பிய நிலையில் காணப்பட்டது. எனவே குழந்தை இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என்று தெரிகிறது. குழந்தையின் பெற்றோர் யார்? என்று தெரியவில்லை.

கள்ளக்காதலில் பிறந்ததால் கூவம் ஆற்றில் வீசி குழந்தை கொலை செய்யப்பட்டதா? அல்லது குழந்தை இறந்து பிறந்ததால் வீசப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com