பொன்னமராவதியில் பா.ஜ.க செயற்குழு கூட்டம்

பொன்னமராவதி வீரப்பெருமாள் கோயில் மண்டபத்தில் பா.ஜ.க புதுக்கோட்டை மாவட்ட செயற்குழுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சேதுபதி தலைமை வகித்தார்.
பொன்னமராவதியில் பா.ஜ.க செயற்குழு கூட்டம்
Published on

பொன்னமராவதி:

பொன்னமராவதி வீரப்பெருமாள் கோயில் மண்டபத்தில் பா.ஜ.க புதுக்கோட்டை மாவட்ட செயற்குழுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சேதுபதி தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ, மாவட்ட விவசாய அணித்தலைவர் பொன்விஜயராகவன், திருச்சி கோட்ட இணை பொறுப்பளார் சிவசாமி, மாநில செயலாளர் புரட்சிக்கவிதாசன் ஆகியோர் நிர்வாகிகள் கட்சிப்பணியாற்றுவது குறித்தும் கட்சி வளர்ச்சிகுறித்தும், அரசின் திட்டங்கள் குறித்தும் பேசினார்கள்.

பறிகொடுத்த பாராம்பரியம் மிக்க புதுக்கோட்டை எம்பி தொகுதியை மீண்டும் கொண்டுவரவேண்டும், மாவட்ட பொதுமக்கள் பயன் பாட்டிற்காக செயல்பட்ட புதுக்கோட்டை அரசு மருத்துவமனையை மீண்டும் பழைய இடத்திலேயே செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள குடியரசுத்தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பது குடிநீர் பிரச்சனையை தீர்க்க மாவட்ட முழுவதும் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் இயற்றப்பட்டது.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பாஸ்கர், ஜீவானந்தம், மாவட்ட பொதுச்செயலாளர்கள் ரங்கசாமி,சி வசாமி,தியாகராஜன், மற்றும் மாவட்ட, ஒன்றிய,நகரம்,பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மண்டலத்தலைவர் ரகுபதி வரவேற்றார். முடிவில் பேரூர் தலைவர் சேதுமலையாண்டி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com