ராஜபாளையத்தில் திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் திடீர் மாயம்

ராஜபாளையத்தில் திருமணமான 10 மாதத்தில் மாயமான இளம் பெண்ணை போலீசார் தேடி வருகிறார்.
ராஜபாளையத்தில் திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் திடீர் மாயம்
Published on

ராஜபாளையம்:

ராஜபாளையம் நட்டுக்கால் ராஜா தெருவை சேர்ந்தவர் தினேஷ் (வயது 25). இருவருக்கும் அதே பகுதியைச்சேர்ந்த குருலட்சுமி (22) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

சம்பவத்தன்று நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் உள்ள அக்கா வீட்டுக்கு செல்வதாக குருலட்சுமி கணவர் வீட்டாரிடம் கூறி விட்டு சென்றார். ஆனால் குருலட்சுமி அங்கு செல்லாமல் மாயமானார்.

இதனால் பதறிப்போன தினேஷ் மற்றும் உறவினர்கள் குருலட்சுமியை பல்வேறு இடங்களில் தேடினர் பலன் இல்லை.

இதுகுறித்து குருலட்சுமியின் தாய் மகேசுவரி ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் லிங்குசாமி வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com