பன்றிக்காய்ச்சலுக்கு தடுப்பூசி கட்டாயம்

நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசிகளை கட்டாயம் போட்டுக்கொள்வது நல்லது. பன்றிக்காய்ச்சல் பரவிய பின்னர், தடுப்பூசி போட்டுக்கொள்வது அந்த அளவிற்கு பயன்தராது.
பன்றிக்காய்ச்சலுக்கு தடுப்பூசி கட்டாயம்
Published on

சாதாரண காய்ச்சல், சளி, இருமல், தொண்டை கரகரப்பு, உடம்பு வலி, தலைவலி, குளிர்காய்ச்சல், வாந்தி ஆகியவை அறிகுறிகளாகும். இவை அனைத்தும் 99 சதவீத நபர்களுக்கு ஒரு வாரத்தில் குணமடைந்து விடும். மேற்கண்ட அறிகுறிகளுடன் மூச்சுத்திணறல் இருந்தாலோ அல்லது அதிகப்படியான காய்ச்சல் தலைவலி, வாந்தி, குளிர் காய்ச்சல் இருந்தாலோ டாக்டரை அணுக வேண்டும். Oseltamavir (Tamiflu) மாத்திரைகளை சாப்பிட்டால் பன்றிக்காய்ச்சல் குணமாகும்.

பன்றிக்காய்ச்சல் நோயின் அறிகுறிகள் உள்ளவர்கள் முழுமையாக ஓய்வு எடுக்க வேண்டும். பிறகு தங்குமிடத்தை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். கைக்குட்டை (கர்சீப்) துணிகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும், எளிதில் ஜீரணிக்க கூடிய உணவுகளை உண்ணுதல் போன்றவையே பன்றிக்காய்ச்சலை குணப்படுத்திவிடும். காய்ச்சலுக்கு பாராசிடமால் மாத்திரைகளை பயன்படுத்தலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com