

* இரவு வேலைக்கு செல்பவர்கள் இரவு உணவை, காலை உணவுபோல் கருதி சத்தாக சாப்பிட வேண்டும். நிறைய பேர் இரவில் பசி எடுக்கக்கூடாது என்பதற்காக இரவு உணவை தாமதமாக உட்கொள்வார்கள். அது தவறான பழக்கம். இரவு 7.30 மணி முதல் 8 மணிக்குள் சாப்பிட்டுவிட வேண்டும்.
* இரவில் அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். அரிசி சாதம், பருப்பு குழம்பு, தீயில் வேகவைக்கப்படும் கோழி இறைச்சி உள்ளிட்ட புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். அவை தூக்க உணர்வில் இருந்து விடுபட வைக்கும்.
* இரவில் விழித்திருக்கும்போது உடலில் வறட்சி தன்மை தோன்றும். அதை போக்க ஒரு டீஸ்பூன் நெய் சாப்பிடுவது நல்லது. அது வறட்சி தன்மையில் இருந்து உடலை சமநிலைப்படுத்த உதவும்.
* இரவு நேரத்தில் பசி உணர்வு அதிகமாக இருக்கும். பசியை போக்குவதற்கு சமோசா, பர்கர் போன்றவற்றை சாப்பிடக்கூடாது. வறுகடலை வகைகள், பாதாம், முந்திரி பருப்பு வகைகளை அளவோடு சாப்பிடுவது நல்லது. அவை உடல் எடையை சீராக பராமரிக்க உதவும். நொறுக்குத்தீனிகள் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தையும் கட்டுப்படுத்தும்.
* இரவு பணியில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் டீ, காபி வகைகளை குறிப்பிட்ட நேர இடைவெளியில் தொடர்ந்து பருகுவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அதற்கு பதிலாக நீர் மற்றும் ஜூஸ் வகைகள் பருகலாம்.