இந்தியாவின் புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார்

40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். நான்கு முறை தேசிய விருதுகளை வென்றவர் ஆவார்.
பின்னணி பாடகி எஸ். ஜானகி
பின்னணி பாடகி எஸ். ஜானகி
Published on

இந்தியாவின் தலைசிறந்த பின்னணி பாடகியான எஸ். ஜானகி அம்மா, வயது மூப்பு காரணமாக இன்று காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

88 வயதான இவர் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தனது காந்த குரலால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.

தமிழ் சினிமாவின் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்கள் இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். இவர் நான்கு முறை தேசிய விருதுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளிலும் பாடியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com