வரலட்சுமி சரத்குமாரின் புதிய படம்

போடா போடி படத்தில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகினார் வரலட்சுமி சரத்குமார்.கோபி சுந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வரலட்சுமி சரத்குமாரின் புதிய படம்
Published on

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் வரலக்ஷ்மி சரத்குமார்.

இதை தொடர்ந்து பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை படத்தில் நடித்தார். இப்படத்தின் மூலம் வரலகட்சுமிக்கு பெரிய அங்கீகாரம் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சண்டகோழி 2, சர்கார், மாரி 2, வெல்வட் நகரம், இரவின் நிழல், வீரா சிம்ஹா ரெட்டி போன்ற போன்ற படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிப் படங்களிலும் வரலக்ஷ்மி நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து வரலட்சுமி அடுத்ததாக சபரி என்ற படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநரான அனில் இப்படத்தை இயக்கியுள்ளார்.

கோபி சுந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். கணேஷ் வெங்கட்ராம், மது நந்தன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். வரும் மே மாதம் 3 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com