

ரோஜா கூட்டம், பார்த்திபன் கனவு, போஸ் உள்பட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீகாந்த்.
சினிமா வாய்ப்புகள் குறைந்து திடீரென ஒரு வழக்கில் சிக்கி சிறை சென்ற ஸ்ரீகாந்த் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார்.
தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ள ஸ்ரீகாந்த் குடும்பத்துடன் மகிழ்ச்சியோடு விடுமுறையை கொண்டாட பாங்காங்க் சென்றுள்ளார்.
பாங்காங்க் கடற்கரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை குடும்பத்தோடு சுற்றி பார்த்து மகிழ்ந்த ஸ்ரீகாந்த், அங்கு எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.