தேசிய விருது பெற்ற இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான இரா.செழியன் காலமானார்

சிவகங்கையை சேர்ந்தவரான செழியன் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.
Chezhiyan
Published on

தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான இரா.செழியன் சென்னையில் இன்று காலை காலமானார்.

மருத்துவமனையில் சிகிச்சை

ஒளிப்பதிவாளர் செழியன் உடல் நலக்குறைவு காரணமாக தரமணியில் உள்ள தனியார் கேன்சர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேசிய விருது

கல்லூரி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளரான செழியன் பணியாற்றி உள்ளார். ஒளிப்பதிவாளரும் உலக சினிமா என்ற நூலாசிரியருமான இரா.செழியன் இயக்கிய டூலெட் (TOLET) திரைப்படம் 2018-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றது.

பி.சி.ஸ்ரீராம்

சிவகங்கையை சேர்ந்தவரான செழியன் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். எழுத்தாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை பெற்றவர் இரா.செழியன்.

செழியன் மறைவுக்கு திரையுலகினரும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com