இந்தியாவில் போர்டு இகோஸ்போர்ட் விலையில் திடீர் மாற்றம்

போர்டு நிறுவனம் இந்திய சந்தையில் தனது இகோஸ்போர்ட் மாடல் விலையை திடீரென மாற்றி அமைத்து இருக்கிறது.
போர்டு இகோஸ்போர்ட்
போர்டு இகோஸ்போர்ட்
Published on

போர்டு இகோஸ்போர்ட் மாடல் விலை இந்திய சந்தையில் திடீரென அதிகரிக்கப்பட்டு உள்ளது. புதிய இகோஸ்போர்ட் அனைத்து வேரியண்ட்களின் விலையும் ரூ. 1500 வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. 

புதிய விலை அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலானதாக போர்டு இந்தியா செரிவித்து இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக விநியோகம் மற்றும் இதர பிரச்சினைகள் ஏற்பட்டது. இதனாலேயே கார் விலை அதிகரிக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

தற்சமயம் போர்டு இகோஸ்போர்ட் மாடல் ரூ. 8.19 லடசத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.73 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

போர்டு இகோஸ்போர்ட் மாடல் தன்டர் எனும் பெயரில் ஸ்பெஷல் எடிஷன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இது இருவித என்ஜின் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com