300 கிலோமீட்டர் வேகத்தில் பறந்த மோட்டார்சைக்கிள் - வைரல் வீடியோவால் கைதான பைக்கர்

பெங்களூரு நெடுஞ்சாலையில் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் பறந்த பைக்கரை போக்குவரத்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்
Published on

சூப்பர்பைக்கில் அதிவேகமாக பறந்த பெங்களூரு பைக்கரை போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைதான நபர் தனது சூப்பர்பைக்கில் மணிக்கு 299 கிலோமீட்டர் வேகத்தில் எலெக்டிரானிக் சிட்டி மேம்பாளத்தில் சென்றார். 

முன்னதாக இவர் அதிவேகமாக சென்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தார். இவர் பதிவேற்றம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

பின் இந்த வீடியோ அழிக்கப்பட்டது. வைரல் வீடியோ கொண்டு வாகன உரிமையாளரை தொடர்பு கொண்டு அவரை போலீசார் கைது செய்தனர். பெங்களூரு பைக்கர் தனது யமஹா ஆர்1 மோட்டார்சைக்கிளில் அபாயகரமாக சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

மேலும் இந்த செயலில் ஈடுபட்ட பைக்கர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது 1000 சிசி மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக பெங்களூரு நகர காவல் துறை தெரிவித்து இருக்கிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com