search icon
என் மலர்tooltip icon

    மகரம் - சனிப்பெயர்ச்சி பலன்கள்

    மகரம்

    சனிப்பெயர்ச்சி (2023) ராசிபலன்கள், பரிகாரங்கள்

    இரண்டில் வருகிறது சனி! நினைத்தது நிறைவேறும் இனி!

    சனியின் வக்ர காலம்!

    19.6.2024 முதல் 4.11.2024 வரை மற்றும் 2.7.2025 முதல் 18.11.2025 வரை என்று இரண்டு முறை சனி வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கும், 2-ம் இடத்திற்கும் அதிபதியான சனி, வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. குடும்பச்சுமை கூடும். கொடுக்கல்-வாங்கல்களில் பிரச்சினைகள் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகளும் தலைதூக்கும். 'மனதில் நினைத்ததை மறுகணமே செய்ய முடியவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். எதையும் தீர்க்கமாக முடிவெடுத்து செய்ய இயலாது. திடீர், திடீரென குணத்திலும் மாற்றம் ஏற்படும். இக்காலத்தில் பணப்பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.

    மகர ராசி நேயர்களே!

    இதுவரை உங்கள் ராசியிலேயே ஜென்மச் சனியாக உலவி வந்த சனி பகவான், 20.12.2023 அன்று உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் அடியெடுத்து வைக்கின்றார். இப்போது குடும்பச்சனியின் ஆதிக்கம் நடைபெறுகின்றது. ஜென்மச்சனி விலகி விட்டது. இப்பொழுது நடைபெறும் குடும்பச்சனியின் ஆதிக்கத்தால் குடும்ப ஒற்றுமை பலப்படும். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத சில காரியங்கள் நடைபெறத் தொடங்கும். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். விலகும் சனியை விரும்பி வழிபட அதற்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்குச் சென்று வருவது நல்லது. சுபச்செய்திகள் வந்து சேரும் நேரம்!

    டிசம்பர் 20-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 2-ம் இடமான குடும்ப ஸ்தானத்திற்கு சனி வருகின்றார். எனவே குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகலும். தள்ளிப்போன கல்யாண காரியங்கள் இப்பொழுது திடீரென முடிவாகி மகிழ்ச்சியை வழங்கும். விலகிச்சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக மாறலாம். இடமாற்றங்கள் இனிமை தரும் விதத்தில் அமையும். கைநழுவிச் சென்ற ஒப்பந்தங்கள் கைகூடிவரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்போடு முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். பொருளாதார நிலை திருப்தி தரும்.

    சனியின் பார்வை பலன்கள்!

    உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை 4, 8, 11 ஆகிய இடங்களில் பதிவாகின்றது. குறிப்பாக கல்வி முன்னேற்றம் ஏற்படும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. தாய் வழி ஆதரவு திருப்தி தரும். வெளிநாட்டில் இருந்து தாய் நாட்டிற்குத் திரும்பி வர இயலாமல் தத்தளித்தவர்கள் இப்பொழுது பிரச்சினைகளில் இருந்து விடுபடும் நேரமாகும். தொழில், உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இப்பொழுது கிடைக்கும்.

    சனியின் பார்வை அஷ்டம ஸ்தானத்தில் பதிவதால் ஆரோக்கியத் தொல்லை வரத்தான் செய்யும். ஆனால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் சுய ஜாதகத்தை ஒருமுறை புரட்டிப் பார்த்துக் கொள்ளுங்கள். திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது. விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும். பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். இடம், பூமி வாங்குவதில் இருந்த பிரச்சினைகள் அகலும்.

    சனியின் பார்வை 11-ம் இடத்தில் பதிவதால் தொழிலில் திருப்திகரமான லாபம் வந்து சேரும். இந்த நேரத்தில் ஒருசிலருக்கு கிளைத்தொழில்கள் தொடங்கும் யோகமும் உண்டு. இளைய சகோதரத்தோடு இருந்த பகை மாறும். வெளிநாட்டில் இருந்து அனுகூலமான தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் இப்பொழுது கிடைக்கலாம். அரசு சார்ந்த பணிகளில் சேர விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு அது கைகூடும்.

    சனியின் பாதசாரப் பலன்கள்!

    செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (20.12.2023 முதல் 21.2.2024 வரை) நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். செல்வந்தர்களின் ஒத்துழைப்போடு திடீர் திருப்பங்களைக் காண்பீர்கள். செல்வ நிலை உயரும். 'சேமிப்புகள் கரைகின்றதே' என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது சேமிப்பு உயர்ந்து மகிழ்ச்சி பெருகும். இடம், பூமியால் லாபம் உண்டு. தொழிலை விரிவு செய்ய முயற்சிப்பீர்கள். இளைய சகோதரத்தின் வழியில் இனிய பலன்கள் உண்டு. வெளிநாட்டில் இருந்து பணிபுரிய அழைப்புகள் வரலாம்.

    ராகு சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (22.2.2024 முதல் 14.3.2025 வரை)

    அனைத்து செயல்களிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருளாதாரத்தில் பற்றாக்குறை அதிகரிக்கும். மனக்கசப்புகள் தரும் தகவல்கள் ஒன்றி ரண்டு வரலாம். குடும்பத்தில் 3-ம் நபரால் குழப்பங்கள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். சில காரியங்கள் திட்டமிடப்படாமலேயே நடைபெற்று மகிழ்ச்சி கொடுக்கும். வீடு கட்டுவது, கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் வாய்ப்பு உண்டு.

    உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சனிக்கிழமை விரதங்களும், வழிபாடுகளும் நம்பிக்கையோடு செய்வதன் மூலம் நன்மைகள் கிடைக்கும்.

    குரு சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (15.3.2025 முதல் 6.3.2026 வரை)

    சகோதரர்களால் நன்மை உண்டு. குடும்பத்தினர்களுடன் புனித யாத் திரை செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களைப் பிரித்துக்கொள்வதில் இருந்த தடைகளும், தாமதங்களும் அகலும். பஞ்சாயத்துக்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். தொழில் மற்றும் ஒப்பந்தங்கள் திருப்தி தரும் விதத்தில் வந்து சேரும்.

    குருப்பெயர்ச்சிக் காலம்!

    சனிப்பெயர்ச்சிக் காலத்தில் இரண்டு முறை குருப்பெயர்ச்சி நிகழ்கின்றது. அதுமட்டுமல்லாமல் வக்ர காலத்தில் கடக ராசிக்கு குரு செல்கின்றார். ரிஷபத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். உடல்நலம் சீராகும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். கல்யாண காரியங்கள் முதல் கட்டிடம் வாங்கும் முயற்சி வரை எல்லா வழிகளிலும் நன்மைகள் கிடைக்கும்.

    மிதுனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது 'விபரீத ராஜயோக' அடிப்படையில் அற்புதமான பலன்களை அள்ளித்தரப் போகின்றார். ஒப்பற்ற வாழ்க்கைக்கு உத்திரவாதம் கிடைக்கும். கற்பனையில் நீங்கள் கண்ட கனவெல்லாம் நனவாகப் போகின்றது.

    கடகத்தில் குரு சஞ்சரிப்பது அற்புதமான நேரமாகும். கடல் தாண்டிச் செல்லும் யோகம் உண்டு. பங்குச்சந்தையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு லாபம் திருப்தி தரும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும் நேரமிது.

    ராகு-கேது பெயர்ச்சிக் காலம்!

    26.4.202025-ல் கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இதன் விளைவாக பணப்புழக்கம் அதிகரிக்கும். பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். மகிழ்ச்சியான தகவல்கள் ஏராளமாக வந்து சேரும். அஷ்டமத்தில் கேது சஞ்சரிக்கப் போவதால் ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.

    வெற்றி பெற வைக்கும் வழிபாடு!

    சனிக்கிழமை தோறும் சனி பகவானை பூஜித்தும், நேசித்தும் வழிபடுவதோடு சனி பகவானுக்குரிய கவசத்தை வாசித்தும் வழிபட்டால் வளர்ச்சி கூடும். சிறப்பு வழிபாடாக பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகரை வழிபட்டால் எல்லை இல்லாத வளர்ச்சி உண்டாகும்.

    மகரம்

    சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2023

    ஏழரைச் சனியின் 3ம் பாகம்

    ஸ்ரீ சனிபகவானின் ஆசி பெற்ற மகர ராசியினரே இதுவரை உங்கள் ராசியில் நின்ற சனி பகவான் 2ம் இடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு சென்று ஆட்சி பலம் பெறப் போகிறார். தன் 3ம் பார்வையால் 4ம் இடமான சுக ஸ்தானத்தையும் 7ம் பார்வையால் 8ம் இடமான ஆயுள் வம்பு, வழக்கு ஸ்தானத்தையும், 10ம் பார்வையால் 11ம் இடமான லாப ஸ்தானத்தையும் பார்வை செய்கிகிறார்.

    குடும்ப ஸ்தான சனியின் பலன்கள்: மகர ராசிக்கு சனி ராசி மற்றும் 2ம் அதிபதி. 2ம் அதிபதி சனி 2ல் ஆட்சி பலம் பெறப் போகிறார். ஏழரைச் சனியின் மூன்றாம் இரண்டரை ஆண்டு ஆரம்பம்.ஐந்தாண்டுகளாக கண்ணீர் விட்டு வெளியில் சொல்ல முடியாமல் நீங்கள் அனுபவித்த பிரச்சனைக்கு விடிவு காலமாக இருக்கும். குடும்ப பொருளாதார பிரச்சனையை சமாளிக்க நீங்கள் வாங்கிய கடனை சிறுது சிறிதாக அடைக்க முயல்வீர்கள். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடை தாமதங்கல் அகலும். வருமானம் அதிகரிக்கும் . இனிமேல் வராது என்று முடிவு செய்த வராக்கடன் வசூலாகும். குடும்ப உறுப்பினர்களின் நன்மதிப்பை பெற சற்று அதிகமாகவே செலவு செய்வீர்கள். வீண் செலவுகளை குறைத்து உங்கள் வருமானத்திற்கு ஏற்ப திட்டமிட்டு அகலக்கால் வைக்காமல் நிதானமாக செயல்பட்டால் கடன் இல்லா பெருவாழ்வு வாழும் பாக்கியத்தை சனி பகவான் தந்து விடுவார்.

    ஏழரை சனியின் மூன்றாம் பகுதி எப்படி நன்மை செய்யும் என்ற பயமும் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்யும்.வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் தொகை கிடைக்கும். பழைய சேமிப்புகள், இன்சூரன்ஸ் பாலிசிகள் முடிவடைந்து ஒரு நல்ல தொகை கைக்கு கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். சிறப்பான முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் நிலவும்.சுப நிகழ்வுகள் நடைபெறும் .வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலை அல்லது புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். சக ஊழியர்களுடன் நிலவிய பிணக்குகள் மறையும். உங்கள் ராசியை சனி கடந்த போது ஏற்பட்ட ஆரோக்ய குறைபாடு, கண், காது , மூக்கு , தொண்டை தொடர்பான தொடர்பான பிரச்சனைகள் மருத்துவத்தில் சீராகும். ஒரு சிலருக்கு கண் தொடர்பான சிறு அறுவை சிகிச்சையும் செய்ய நேரும்.உங்களின் முயற்சிகள் அனைத்தும் பலிதமாகும்.

    3ம் பார்வை பலன்: சனியின் 3ம் பார்வை 4ம் மிடமான சுகஸ்தானத்தில் பதிகிறது. உங்களின் சுக ஸ்தானமாகிய மேஷத்தின் அதிபதி செவ்வாயும் பகை கிரகம் என்பதால் சுப பலன்கள் சற்று ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். வீடு, வாகனம் தொடர்பான உங்களின் கனவுகள் பலிதமாகும். வாடகை வீட்டில் இருந்தவர்கள் சொந்த வீட்டிற்கு செல்வார்கள்.வங்கிகள் , நிதி நிறுவனங்களின் உதவியுடன் வீடு, மனை, நிலம் வாங்குதல் சுலபமாக நடைபெறும். ஒரு சிலர் பழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்குவீர்கள். தாயின் ஆரோக்கியத்தை பராமரிக்க அதிக செலவு செய்ய நேரும். பள்ளி, கல்லூரியில் படிக்கும். மாணவ மாணவிகள் டிவி, சினிமா, மொபைல் போன், விளையாட்டு போன்றவற்றில் ஆர்வத்தைக் குறைத்து படிப்பில் அதிக கவனம் செலுத்தினால் எதிர்காலம் சிறக்கும்.நல்ல மதிப்பெண் பெற சுறுசுறுப்பும் தெளிந்த சிந்தனையும் தேவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    7ம் பார்வை பலன்: சனியின் 7ம் பார்வை ராசிக்கு 8ம் இடமான சிம்மத்தில் பதிகிறது. வாக்கு ஸ்தானத்தில் நிற்கும் சனி பகவான் நிற்பதால் வாக்கில் நிதானம் தேவை. தீயினால் சுட்ட புண் கூட ஆறிவிடும். நாவினால் சுட்ட புண் ஆறாது என்று வள்ளுவர் கூறி இருக்கிறார். எனவே யாரையும் கடுமையாக பேசக்கூடாது. பேச்சை தொழிலாக கொண்டவர்களுக்கு இது ஒரு அற்புதமான காலம். வக்கீல்கள், சேல்ஸ்மேன்கள் , இலக்கிய பேச்சாளர்கள், ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்துவோர் ஆகியோருக்கு பெயர், புகழ் செல்வாக்கு மிகச் சிறப்பாக இருக்கும். மிகக் குறுகிய காலத்தில் தொழில் ரீதியான மிகப் பெரிய வளர்ச்சியை பார்ப்பார்கள். சில தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக கோர்ட் படி ஏற நேரும். சிலருக்கு எப்பொழுதோ ஏற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு வரும். ஆயுளுக்கு பங்கம் விளைவிக்கும் நோயால் அவதிப்படுவர்களுக்கும் ஆயுள் தீர்க்கம் . சிறு உடல் உபாதைகளால் மருத்துவச் செலவு அதிகரிக்கும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

    10ம் பார்வை பலன்: சனியின் 10ம் பார்வை 11ம் இடமான லாப ஸ்தானத்திற்கு இருப்பதால் சொந்த தொழில் செய்பவர்களுக்கு மிகப் பெரிய திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் மிகும். தொழிலை விரிவுபடுத்தும் தீவிர சிந்தனை இருக்கும். சிலருக்கு மறைமுக வழியில் தன லாபங்கள் இருக்கும். எப்படி பணம் வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத வகையில் பணவரவு இருக்கும். உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும். இளம் காதலர்களுக்கு பெற்றோர் சம்மத்துடன் திருமணம் நடக்கும். இரண்டாம் திருமணத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். மருத்துவ துறையில் உள்ளவர்கள், உணவுத்துறையில் உள்ளவர்கள், இது ஒரு அற்புதமான காலம். ஆடை அணிகலன்கள் விற்பனை செய்பவர், தயாரிப்பாளர்கள், அழகுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்பவர்கள், உடற்பயிற்சிக் கூடம், அழகு நிலையம் போன்றவற்றை நடத்துபவர்களுக்கும் வருமானம் குறிப்பிடத் தகுந்தபடி இருக்கும்.

    சனியின் அவிட்டம் நட்சத்திர சஞ்சார பலன்கள். 17.1.2023 முதல் 14.3.2023 வரை

    மகர ராசிக்கு 4,11ம் அதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில்கடன் சுமை குறையும். வம்பு வழக்குகள் எதிர்பாராத வெற்றியைத் பெற்றுத் தரும் அல்லது விசாரணை தள்ளிப்போகும். பணம் தொடர்பான வழக்குகள் இருந்தால் தள்ளுபடியாகும். நோய் நொடி நீங்கி ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விவசாயிகள் அதி நவீன யுக்திகளால் உற்பத்தியை அதிகரித்து உழைப்பிற்கு ஏற்ற லாபத்தை காண்பார்கள். கால்நடைகள் மற்றும் ஸ்திர சொத்துக்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்டம், புதையல் லாட்டரி , உயில் மூலம் எதிர்பாராத வகையில் பண வரவு வரும். சிற்றின்பத்தில் நாட்டம் மிகும். காதல் விவகாரங்கள் கசந்து மன வேதனையை அதிகரிக்கும்.

    சதயம் நட்சத்திர சஞ்சார பலன்கள். 14.3.2023 முதல் 6.4.2024 வரை

    கோட்சாரத்தில் அக்டோபர் 30, 2023 வரை ராசிக்கு 4ம்மிடத்திலும் அதன் பிறகு 3ம்மிடத்திலும் சஞ்சரிக்கும் ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் வீடு மனை சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். பல வருடங்களாக சொத்தில் ஆக்கிரப்பு செய்தவர்கள் தாமாகவே வெளியேறுவார்கள். சிலரின் குடியிருப்பில் உள்ள வாடகை தாரர்கள் மாறலாம். தாயின் ஆரோக்கிய குறைபாடு அகலும். வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். மருமகனால் ஏற்பட்ட சங்கடங்கள் அகலும். சிலருக்கு பிறரின் பொறாமை குணத்தால் கண் திருஷ்டி உருவாகலாம்.

    யாருக்கேனும் ஜாமீன் போட்டு வம்பு வழக்கில் சிக்கி கொள்ள நேரும். 17.6.2023 முதல் 4.11.2023 வரை ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ரம் பெறும் காலங்களில் அடுத்தவர் தவறை சுட்டிக் காட்டி உங்களின் வெளிப்படையான பேச்சால் பிரச்சனையை விலை கொடுத்தது வாங்க கூடாது. உங்களுக்கு எதிரி என்று ஒருவர் வெளியில் இருந்து வரத் தேவை இல்லை. உங்களின் செயல்பாடே உங்களுக்கு எதிரியாக மாறும். தந்தை, தந்தை வழி உறவினர்கள் வெளி பேச்சில் நல்லவராகவும் மனதிற்குள் வஞ்சகமும் வைத்து பேசுவார்கள். பூர்வீக சொத்து இன்று வந்து விடும் நாளை வந்து விடும் என இலவு காத்த கிளியாக நாளை கடத்த வேண்டும்.

    பூரட்டாதி நட்சத்திர சஞ்சார பலன்கள் 6.4.2024 முதல் 29.3.2025 வரை

    மகர ராசிக்கு 3,12ம் அதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் கவலைகள் அகலும்.எதிர்மறை எண்ணங்கள் விலகும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். உடன் பிறந்த சகோதரிகள் தாயின் பூர்வீகச் சொத்தில் உரிமை கோருவார்கள். பாகப் பிரிவினையில் சகோதர, சகோதரிகளுக்கு விட்டுக் கொடுக்கும் நிலை உருவாகும். வெளிநாட்டு கல்வி, வேலை, தொழிலுக்கு முயற்சிப்பவர்களுக்கு வாய்ப்பு கிட்டும். இது வரை வெளிநாடு செல்லாதவர்களுக்கும் வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்கும். கலைத்துறையினருக்கு பல மொழிப் படங்களில் வாய்ப்புகள் தேடிவரும். கடல் கடந்து சென்று கலை நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு கிட்டும். பொருளாதார நிலையில் சிறு ஏற்றத்தாழ்வு இருக்கும்.

    30.6.2024 முதல் 15.11.2024 வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ரம் பெறும் காலத்தில் உங்களின் செயல்களில் சுயநலப் போக்கு உருவாகும். குழப்பமான மனநிலையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கும். ஞாபக மறதி உண்டாகும்.பய உணர்வு அதிகரிக்கும். சிலருக்கு கண் பார்வை குறைவின் காரணமாக கண்ணாடி அணிவார்கள் அல்லது அறுவை சிகிச்சை செய்வார்கள் உடன் பிறந்தவர்களின் சுப செலவிற்கு ஒரு கணிசமான தொகையை ஒதுக்குவீர்கள். சிலரின் ஆன்லைனில் பொருள் வாங்கும் மோகம் வங்கி சேமிப்பை கரைத்து விடும்.யாருக்கேனும் நன்மை செய்தால் அது உங்களுக்கு தீமையாகவே வந்து முடியும். உறவினர்களின் சொந்த விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும்.

    திருமணம்: சுய ஜாதக ரீதியாக திருமணம் நடை பெறுவதில் எவ்வளவு சிரமம் இருந்தாலும் குடும்பச் சனியின் காலம் என்பதால் திருமணத் தடை விலகி திருமணம் நடைபெறும். உங்கள் விருப்பத்திற்கும் மனதிற்கும் பிடித்த நல்ல வரன் அமையும்.

    பெண்கள்: பெண்களுக்கு அதிக நன்மைகள் நடக்கும்.இது வரை தடைபட்ட விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். சிந்தனை செயல் திறன் கூடும் விதவிதமான நகைகள் வாங்கி மகிழ்வீர்கள். புகுந்த வீட்டில் உங்களின் பேச்சுக்கு தனி மதிப்பும் மரியாதையும் ஏற்படும். அந்தஸ்து கவுரவம் உயரும்.

    பரிகாரம்: 5 ஆண்டுகளை இறைநம்பிக்கையுடன் கடந்த உங்களை மீதமுள்ள இரண்டரை ஆண்டுகளை கடக்க வழிபாடுகள் உதவும். தேய்பிறை அஷ்டமிகளில் காலபைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்து வழிபட்டு வர குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து சித்தர்கள் வழிபாடு செய்தால் தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். கோவில் குளத்தில் உள்ள மீனுக்கு பொரி போட பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    சனிப்பெயர்ச்சி பலன்கள்

    ஜனவரி 24-ம் தேதி 2020 முதல் 2023 ஆண்டு வரை

    ஜென்ம ராசியில் சனி! சிந்தித்து செயல்பட வேண்டும் இனி!

    மகர ராசி நேயர்களே!

    இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று உங்கள் ஜென்ம ராசிக்கு வருகின்றார். ஏழரைச்சனியில் விரயச்சனி முடிந்து ஜென்மச்சனி தொடங்கிவிட்டது. மகரம், சனிக்குச் சொந்த வீடு என்பதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் 'ஆயுள்காரகன்' என்று சொல்லப்படும் சனி பகவான், உங்களுக்கோ, உங்களைச் சார்ந்த குடும்பத்தினர் களுக்கோ உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு தொல்லைகளை கொடுத்து நிவர்த்திசெய்வார். திடீர் திடீரென முடிவுகளை மாற்றிக்கொள்வீர்கள். பொருளாதாரப் பற்றாக்குறை அதி கரிக்கலாம்.

    மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு இருப்பதால் அவரோடு இப்பொழுது சனி சேர்வதால் 'நீச்சபங்க ராஜயோகம்' ஏற்படுகின்றது. மேலும் விரயாதிபதி குரு நீச்சம் பெறுவதும் யோகம்தான். எனவே விரயங்களைச் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு ஏற்படும். வீடு மாற்றங்கள், இடமாற்றங் கள், உத்தியோக மாற்றங்கள் வருவதற்கான அறிகுறிகள் தென்படும்.

    ஜென்மச்சனியின் ஆதிக்கம்

    டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசியிலேயே சனி சஞ்சரிக்கப் போகின்றார். இந்த ஜென்மச்சனி காலத்தில், திடீர், திடீரென மாற்றங்களும், மனக்குழப்பங்களும் அதிகரிக்கும். எதிர்பார்த்த வகையில் சிலருக்கு ஏமாற்றங்கள் வரலாம். பொல்லாதவர்களை விட்டு விலகி நல்லவர்களோடு இணைந்து செயல்பட்டால் உள்ளம் மகிழும் சம்பவங்களை நிறைய சந்திக்கலாம். இல்லையேல் அல்லல்பட்டு அதற்கு பரிகாரங்களை தேட வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் செயல்களில் குறை கண்டுபிடிப்பர். பணியில் தொய்வு ஏற்படும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பகை உருவாகலாம்.

    சனியின் பார்வை பலன்கள்

    உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை, 3, 7, 10 ஆகிய இடங்களில் பதிகின்றது. ராசிநாதன் மட்டுமல்லாமல் தனாதிபதியாகவும் சனி விளங்குவதால் அந்த இடங்கள் எல்லாம் புனிதமடைந்து அதற்குரிய காரகத்துவத்தைச் சிறப்பாகச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. சகோதரம், வெற்றி, பஞ்சாயத்துக்கள், களத்திரம், குடும்பம், வெளிநாட்டு முயற்சி, தொழில் வளம், பெற்றோர்களின் ஆரோக்கியம் ஆகியவற்றில் எல்லாம் மாற்றங்கள் வரலாம். 3-ம் இடத்தை சனி பார்ப்பதால் உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். வழக்குகளில் எதிர்பாராத மாற்றம் உண்டு.

    சனியின் பார்வை சப்தம ஸ்தானத்தில் பதிவதால், கல்யாண முயற்சிகளில் ஒருசில தடைகள் இருந்தாலும் கடைசி நேரத்தில் சிறப்பாக முடிந்துவிடும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து அதன் மூலம் உதிரி வருமானங்களும் வரலாம். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி வணிகம் மற்றும் பங்குச்சந்தையில் ஈடுபட்டிருப்பவர்கள், கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

    சனியின் பார்வை பத்தாமிடத்தில் பதிவதால், பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் தேவை. தொழில் மாற்றச் சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய பொறுப்புகளை மற்றவர் களிடம் ஒப்படைக்கக்கூடாது. சகப் பணியாளர்களால் சிறுசிறு தொல்லைகள் ஏற்படலாம். தொழில் நடத்து பவர்களுக்கு போதிய மூலதனம் இல்லாமல் புதிய பங்குதாரர்களைச் சேர்க்க விரும்புவர்.

    சனியின் பாதசாரப் பலன்கள்

    27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, மிகுந்த கவனம் தேவைப்படும். வம்பு வழக்குகள் வாசல் தேடி வரும். அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்காது. அஷ்டமாதிபதியாக சூரியன் விளங்குவதால் எதையும் துணிந்து செய்ய இயலாது. தொடர்கதையாய் கடன்சுமை அதிகரிக்கும். அரசாங்க விரோதங்களும் உண்டு. அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு திடீரெனப் பொறுப்புகள் மாற்றப்படலாம். செய்தொழிலில் கவனம் செலுத்தா விட்டால் ஒவ்வொரு நாளும் இழப்புகளையே சந்திக்க நேரிடும்.

    28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, கல்யாண முயற்சிகள் கை கூடும். களத்திர ஸ்தானாதிபதியாகச் சந்திர பகவான் விளங்குவதால் குடும்பத்தில் பிரிந்தவர்கள் வந்து சேர வாய்ப்பு உண்டு. வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்ப முடியாமல் தத்தளித்தவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கைகூடி வரும். வாகனம் வாங்க நினைப் பவர்களுக்கு இக்காலம் உகந்த காலமாகும். வாகனத்தை மாற்ற விரும்புபவர்களுக்கு விலை உயர்ந்த நவநாகரிக வாகனம் வாங்கி மகிழ்வீர்கள்.

    27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். செல்வந்தர்களின் ஒத்துழைப்போடு திடீர் திருப்பங்களைக் காண்பீர்கள். செல்வநிலை உயரும். 'சேமிப்புக் கரைகிறதே' என்று கவலைப்பட்டவர்கள், இப்பொழுது மகிழ்ச்சி அடைவர். இடம், பூமியால் லாபம் உண்டு. என்றைக்கோ வாங்கிப்போட்ட இடம் இப்பொழுது பலமடங்கு விலை உயர்ந்து, அதன் விற்பனை மூலம் வரும் தொகையைக் கொண்டு தொழிலை விரிவு செய்ய முயற்சிப்பீர்கள். கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும். பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும். அரசு வேலைக்கு விண்ணப்பித்த வர்களுக்கு அனுகூலமான நேரம் இது. இக்காலத்தில் கும்பத்தில் சனியும் சஞ்சரிப்பதால் வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

    குருப்பெயர்ச்சிக் காலம்

    சனிப்பெயர்ச்சி காலத்தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெறப்போகின்றது. கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, தன ஸ்தானம் வலுவடைகின்றது. எனவே பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அதிகார பலம் பெற்றவர்களின் ஆதரவோடு நல்ல சந்தர்ப்பங்கள் தேடிவரும். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உத்தியோக உயர்வும், எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அர்த்தாஷ்டம குருவாக வருவதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக் கலாம்.

    ராகு-கேது பெயர்ச்சிக் காலம்

    21.3.2022-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். அர்த்தாஷ்டம ராகுவாக வருவதால் ஆரோக்கியத் தொல்லைகள் உண்டு. பொறுமையுடன் செயல்பட வேண்டிய நேரமிது. 10-ல் கேது சஞ்சரிப்பதால் தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு.

    8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த காலகட்டத்தில், உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சகோதர சச்சரவுகள் அகலும். நிலுவையில் இருந்த வழக்குகள் சாதகமாக முடியும். கேது பலத்தால் தந்தை வழி உறவில் இருந்த விரிசல்கள் அகலும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர்.

    வெற்றி பெற வைக்கும் வழிபாடு

    சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொள்வதோடு இல்லத்து பூஜை அறையில் விஸ்வரூப ஆஞ்சநேயர் படம் வைத்து அனுமன் கவசம் பாடி வழிபட்டால் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.

    ×