search icon
என் மலர்tooltip icon

    மகரம்

    குருப்பெயர்ச்சி பலன்கள் 2023

    நேர்மையான மகர ராசியினரே இதுவரை ராசிக்கு 3-ம்மிடத்தில் சஞ்சரித்த குரு பகவான் நான்காமிடமான சுகஸ்தானம் செல்கிறார். அக்டோடர் 30, 2023 வரை மேஷ ராசியில் உள்ள ராகுவுடன் இணைகிறார். இந்த குருப்பெயர்ச்சி முழுவதும் சனியின் மூன்றாம் பார்வை பெற்று பலன் தரப்போகிறார்.

    நான்காமிட குருவின் பொது பலன் :

    மகர ராசிக்கு 3,12-ம் அதிபதியான குருபகவான் நான்காமிடமான சுக ஸ்தானம் நோக்கிச் செல்கிறார். நான்காமிடம் என்பது கல்வி, தாய், வாகனம், பூமி, வீடு, தேக சுகம் போன்றவை பற்றிக் கூறுமிடம். அர்தாஷ்டம குருவாக இருப்பதால் அஷ்டமத்தில் கிரகங்கள் நிற்பதால் ஏற்படும் பலனில் பாதியை நிச்சயம் செய்யும். அதனால் பாதி நன்மையும் பாதி தீமையும் கலந்த பலன் நடக்கும். மூன்றாம் அதிபதி குரு நான்கில் அமர்வதால் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்காக விட்டுக் கொடுத்து வாழ வேண்டிய காலம்.நெருங்கிய சொந்தங்களால் மன அமைதி குறையும். சிலரின் மாமனார் வயோதிகத்தின் காரணமாக வீட்டோடு வந்து தங்கலாம். முறையற்ற பாகப் பிரிவினை அல்லது சொத்துப் பங்கீடு உங்களை சங்கடத்தில் ஆழ்த்தும். பணவரவும், பொருளாதாரமும் நன்றாகவே இருக்கும். அதானால் நிதி நிலைமை பற்றிக் கவலைப்பட வேண்டி இருக்காது.

    பணவரவு எவ்வளவு இருந்தாலும் தவிர்க்க முடியாத விரயத்தால் பற்றாக்குறையை அர்தாஷ்டம குரு ஏற்படுத்துவார். எனவே இந்த காலத்தில் சொத்து விற்கப் போனால் அடிமாட்டு விலைக்கு விற்பீர்கள். வாங்கப் போனால் அதிக விலை கொடுத்து வாங்குவீர்கள். வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் போகியத்திற்கு வீடு பிடித்துச் செல்லலாம். அல்லது சொந்தமாக வீடு கட்டிச் செல்லலாம். அவரவர் வயதிற்கும் தேவைக்கும் ஏற்ப வீடு மாற்றம், வேலை மாற்றம், தொழில் மாற்றம் அல்லது பள்ளி மாற்றம் என ஏதாவது ஒரு மாற்றம் நிச்சயம் உண்டு. வயதானவர்கள் சிறிது காலம் வெளியூர், வெளிநாட்டிலிருக்கும் பேரன், பேத்தி வீட்டிற்குச் சென்று ஓய்வு எடுத்து வரலாம். சில பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு உதவி செய்ய வெளியூர், வெளிநாடு செல்லலாம்.தாய் மற்றும் தாய் வழி உறவுகளின் அன்பு ஆசிர்வாதம் மகிழ்ச்சியைத் தரும். தாய்க்கு வைத்தியச் செலவில் ஆரோக்கியம் சீராகும்.

    குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள் :

    ராசிக்கு எட்டாமிடமான அஷ்டம ஸ்தானத்தில் குருவின் ஐந்தாம் பார்வை பதிகிறது. குருவின் பார்வை பலத்தால் எட்டாம் பாவக காரகத்துவங்களான வம்பு, வழக்கு, அவமானம், விபத்து, கண்டம், சர்ஜரி ஆகிய பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். பெரிய அளவில் வரவிருந்த நஷ்டம், கடன், ஆபத்து, சிக்கல்கள் விலகி நிம்மதி உண்டாகும்.எனவே பிறர் அநாவசிய வம்பு, வழக்கு, ஜாமீன் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு மனக் குழப்பத்தை அதிகரிக்கும் சம்பவங்கள் நடக்கும். தீராத நோயால் மரணத்தின் விளிம்பு வரை சென்றவர்கள் கூட வைத்தியத்தால் எழுந்து உட்காருவார்கள்.

    குருவின் ஏழாம் பார்வை பலன்கள் :

    ராசிக்கு பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் குருவின் ஏழாம் பார்வை பதிகிறது. செய்யும் தொழிலில் இருந்து வந்த கடன்கள், சிக்கல்கள் முடிவுக்கு வரும். தொழில் மூலம் உங்கள் அந்தஸ்து கவுரவம் உயரும் . இதுவரை உங்களைப் அறிந்திராத பலர் உங்களைப் பற்றி தெரிந்து புதிய தொழில் வாய்ப்புகள் கொடுப்பார்கள். அந்தஸ்த்தான நபர்களின் நட்பால் முதலீட்டை அதிகரிப்பீர்கள். நல்ல திறமையான நம்பிக்கையான தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். புதிய எந்திரங்கள், தொழிலுக்கு தேவையான உபகரணங்கள் வாங்கி தொழிலை விரிவு செய்வீர்கள். குறைந்த முதலீட்டில் தொழில் செய்தவர்கள் வியாபார முன்னேற்றத்திற்காக அடிக்கடி வெளியூர், வெளிநாடு சென்று வரநேரும். சிலர் புதியதாக தொழில் துவங்குவார்கள்.

    குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள் :

    ராசிக்கு பனிரென்டாமிடமான விரயஸ்தானத்திற்கு குருவின் ஒன்பதாம் பார்வை பதிகிறது இடுப்பிற்கு கீழ் ஏற்படும் உடல் உபாதைகளான மூட்டு வீக்கம், கால்குடைச்சல்,மூட்டு வலி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சுகஸ்தானத்தில் நிற்கும் குரு சாதாரண மருந்துகள் மூலம் அனைத்து விதமான நோய்களுக்கும் தீர்வு கொடுப்பார். கண் பாதிப்பு இருப்பவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம்.மதிப்பு மரியாதை குறைவால் மன வெறுப்பால் பூர்வீகத்தை விட்டு வெளியேறியவர்கள் இருக்கும் இடம் தெரிய வரும்.

    அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள்- 22.4.2023 முதல் 21.6.2023 வரை

    கோட்சாரத்தில் ராசிக்கு பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் பணியின் தன்மை, ஊதியம், பணி நியமன ஆணை, பணிக்கான ஒப்பந்தம் போன்றவற்றை சரிபார்த்த பிறகே வேலைக்கு செல்ல வேண்டும்.

    பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள்- 22.6.2023 முதல் 17.4.2024 வரை

    மகர ராசிக்கு 5,10ம் அதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் சரியில்லாத வேலை குறைவான சம்பளத்தில் காலம் தள்ளியவர்கருக்கு வேறு வேலை, வேறு கம்பெனியில் உயர்ந்த சம்பளத்தில் வேலை கிடைக்கும்.அரசு உத்தியோக வாய்ப்பு கிடைக்கும். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி கவுரவப் பதவியில் அமரும் வாய்ப்பு உள்ளது. தாமதமாகி வந்த மகன், மகள் திருமணம் முடிவுக்கு வரும். இதுவரை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குலதெய்வ அருளால் கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். தொழில் உத்தியோகத்திற்காக பூர்வீகத்தை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் பூர்வீகத்திற்கு வந்து செட்டிலாகுவார்கள்.

    கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள்- 18.4.2024 முதல் 30.4.2024 வரை

    மகர ராசிக்கு அஷ்டமாதிபதியான சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் கோட்சார கேதுவும் ஒன்பதாமிடத்தில் இருப்பார். இந்த கால கட்டத்தில் சிலருக்கு விபரீத ராஜயோகமாக உயில் சொத்து, பங்குச் சந்தை லாபம், ரேஸ், பந்தயப் பணம், எதிர்பாராத அதிர்ஷ்ட பணம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது.தேவையற்ற வம்பு வழக்கை தவிர்த்தல் நல்லது. சிலருக்கு புதிய எதிர்பாலின நட்பால் அவமானம் அல்லது ஏமாற்றம் ஏற்படும்.

    குருவின் வக்ர பலன்கள் :

    4.9.2023 முதல் 26.11.2023 வரை பரணி நட்சத்திரத்திலும் 27.11.2023 முதல் 31.12.2023 வரை அசுவினி நட்சத்திரத்திலும் குரு பகவான் வக்ரம் அடையும் காலத்தில் குடும்பச் சொத்துக்களை விற்பது, பிரிப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. அடுத்த குருப்பெயர்ச்சி வரை இவைகளை ஒத்தி வைக்க முயற்சிக்கவும்.சிலர் முக்கிய தேவைக்காக சொத்துக்களை அடமானம் வைத்து கடன் பெறலாம்.நிலம் சம்பந்தமான வழக்குகள் விசாரணைக்கு வரலாம். ஆரோக்கிய குறைபாட்டால் மன சஞ்சலம் கூடும். சேமிப்புகளை செலவிட நேரும்.

    பெண்கள் :

    பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி புதிய சொத்துக்களை கொடுக்கும். மகன், மகள் விசயத்தில் இருந்த கவலைகள் இனிமேல் இருக்காது. கணவன், மனைவி உறவு திருப்தியாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலைத்து இருக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சு எடுபடும். கணவர் உங்களுக்கு தங்க நகை வாங்கி கொடுத்து மகிழ்விப்பார். எட்டாமிடமான மாங்கல்ய ஸ்தானத்திற்கு சனி பார்வை இருப்பதால் பெண்கள் வெள்ளிக்கிழமை வயதான சுமங்கலிகளிடம் ஆசி பெற வேண்டும்.

    மாணவர்கள் :

    விரும்பிய கல்லூரி, பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு உள்ளது. முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்பதால் மாணவர்கள் படிப்பில் ஒரே சிந்தனையுடன் ஈடுபட்டால் அர்தாஷ்டம குரு மற்றும் ஏழரைச் சனியின் பாதிப்பு விலகும். திட்டமிட்டு செயல்படும் போது பல சாதனைகள் புரியமுடியும்.

    உத்தியோகஸ்தர்கள் :

    வேலை இல்லாமல் அவதிப்பட்டவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். பணி புரியும் இடத்தில் சக ஊழியர்கள் மற்றும் மேலாதிகாரிகளால் ஏற்பட்ட இன்னல்கள் விலகும். விண்ணப்பித்த இடமாற்றம் கிடைக்கும். மேலதிகாரி ஆலோசனை கேட்டு செயல்படும் வகையில் சூழ்நிலை மாற்றம் உண்டாகும்.

    ராகு/கேது பெயர்ச்சி :

    அக்டோபர் 30,2023ல் ராகு 3ம் மிடத்திற்கும் கேது 9ம்மிடத்திற்கும் செல்கிறார். எதிர் நீச்சல் போட்டு முன்னேறுவீர்கள். வெளிநாட்டு வருமானம், வேற்று இனத்தவர்களின் உதவி கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். லாபம் வருவதற்கு புதிய யுக்திகளை கையாளுவீர்கள். பூர்வீகச் சொத்து தொடர்பான பேச்சு வார்த்தை நடக்கும்.

    பரிகாரம் :

    கோட்சார பலன்களைப் பார்த்து பயப்படத் தேவையில்லை. உங்கள் சுய ஜாதக தசாபுத்தியும் சேர்ந்து பலன்கள் கூட்டியோ, குறைத்தோ நடக்கும். இறைவழி பாடு கவசமாய் உங்களைக் காக்கும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு பால், இளநீர் அபிசேகம் செய்து வழிபட தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும்.ஜென்ம நட்சத்திர நாளில் விநாயகருக்கு வெள்ளெருக்கு மாலை சாற்றி வழி அர்தாஷ்டம குரு மற்றும் ஏழரைச் சனியின் பாதிப்பு விலகும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×