search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாட்டர் பியூரிபையர்"

    • நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத் தோல் உறிஞ்சிவிடுகிறது.
    • பியூரிபையர் தேவை இல்லை வாழைப்பழத்தோல் இருந்தால் போதும்.

    இனி குடிநீரை சுத்தம் செய்ய பியூரிபையர் போன்ற பொருட்கள் தேவையே இல்லை. வாழைப்பழத்தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!

    ஆச்சரியமாக இருக்கிறதா? குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரைவிட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இப்படி ஒரு விந்தையான ஆராய்ச்சியை பிரேசில் இன்ஸ்டிடியூட் ஆப் பயோசின்சியாஸ் நிறுவனம் மேற்கொண்டது. அந்த குழு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு இதோ...

    ''சுற்றுச்சூழல் சீர்கேடு, நீர்நிலைகளில் கலக்கும் மாசு மூலம் நீரில் காரீயம், செம்பு உள்பட பல உலோகங்களும், ரசாயனப் பொருட்களும் கலந்து நீர் குடிக்க முடியாத அளவிற்கு மாசடைந்து காணப்படுகிறது. இப்படி மாசடைந்த நீரைப் பருகினால், உடல் நலன் பாதிப்பு நிச்சயம். மாசடைந்த நீரை சுத்தமாக்குவதற்கு பியூரிபையர் உள்பட பல பொருட்கள் நடைமுறையில் உள்ளன.

    வசதிபடைத்தவர்கள், ஓரளவு சம்பாதிப்பவர்கள் மட்டுமே இதுபோன்ற பொருட்களை பயன்படுத்த முடியும். ஏழைகள் இப்படி ஒரு பொருளை கற்பனை செய்து பார்க்க முடியாது. அதற்காகவே இந்த ஆய்வு.

    ஏற்கனவே தேங்காய் நார் மற்றும் கடலைத்தோல் மூலம் நீரைச் சுத்தப்படுத்தும் முறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் எவர்சில்வர் பாத்திரங்கள் மற்றும் ஷூக்களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழத் தோலைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்த ஆய்வில் இறங்கினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

    நீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால், அதில் உள்ள நச்சுக்கள் உடனடியாக குறைவதை ஆய்வில் கண்டோம். நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத் தோல் உறிஞ்சிவிடுகிறது. இதனால், 90 சதவீதம் அளவுக்கு நீர் சுத்தமாகிறது. பல கட்டங்களாக ஆய்வு செய்தே வாழைப்பழத் தோலுக்கு இப்படி ஒரு ஆற்றல் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம்.

    நீரைச் சுத்தப்படுத்துவதில் இம்முறை சிறப்பானது. செலவும் குறைவு. ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன்படுத்தலாம். குறிப்பாக ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் ஏழை நாடுகளுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும்" என்று முடிகிறது ஆய்வறிக்கை.

    • தண்ணீரின் தன்மையை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
    • யு.வி., ஆர்.ஓ. சுத்திகரிப்பான்கள் மின்சாரம் இல்லாமல் இயங்காது.

    குடிநீர் சுத்திகரிப்பு கருவியை வாங்குவதற்கு முன்பு, உங்கள் வீட்டில் இருக்கும் தண்ணீரின் தன்மையை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். உங்களுடைய குடிநீர் ஆதாரம் நீர்நிலைகளில் இருந்து பெறப்படும் தண்ணீரா அல்லது நிலத்தடி தண்ணீரா என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். நோய்க்கிருமிகளால் அந்த தண்ணீர் மாசுபட்டிருந்தால் யு.வி. அல்லது யு.எப். போன்ற அம்சங்கள் கொண்ட வாட்டர் பியூரிபையரை தேர்ந்தெடுக்கலாம்.

    தண்ணீரில் அதிகப்படியான உப்பு இருந்தால் யு.வி. அல்லது யு.எப். உடன் கூடிய ஆர்.ஓ. சுத்திகரிப்பு கருவியை தேர்ந்தெடுக்கலாம். சில வகை தண்ணீர் சுத்திகரிப்பு கருவிகளின் இயக்கத்தில் மின்சாரம் முக்கியப் பங்கு வகிக்கிறது. மின்சாரம் இல்லாமல் வேலை செய்யக்கூடிய கருவிகளும் கிடைக்கின்றன.

    யு.வி. அல்லது ஆர்.ஓ. சுத்திகரிப்பான்கள் மின்சாரம் இல்லாமல் இயங்காது. எனவே அடிக்கடி மின்தடை ஏற்படும் பகுதிகளில் வசிப்பவர்கள், மின்சாரம் இல்லாமல் வேலை செய்யக்கூடிய அல்லது குறைந்த மின் சக்தியை பயன்படுத்தக்கூடிய சுத்திகரிப்பு கருவிகளை தேர்ந்தெடுப்பது நல்லது.

    தண்ணீர் அழுத்தம் அதிகம் உள்ள இடங்களில் சுத்திகரிப்பான்களை அமைக்க வேண்டும். 2 வெப்பத்தை வெளியிடும் பொருட்களுக்கு அருகிலோ அல்லது நேரடி சூரிய ஒளி படும் இடங்களிலோ தண்ணீர் சுத்திகரிப்பு கருவியை நிறுவக்கூடாது.

    பெரும்பாலான சுத்திகரிப்பு கருவிகளில் பயன்படுத்தப்படும் வடிகட்டி, பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டிருக்கும். அதிகமான வெப்பத்தால் அது சிதைந்து விடும். அதில் உள்ள தண்ணீரை குடிக்கும்போது ஆரோக்கிய சீர்கேடுகள் உண்டாகும்.

    குடிநீர் சுத்திகரிப்பு கருவியில் உள்ள வடிகட்டியை அடிக்கடி கழற்றி சுத்தம் செய்யும் வசதி உள்ள இடத்தில் அதை பொருத்துவது சிறந்தது.

    குடிநீர் சுத்திகரிப்பு கருவியில் பொருத்தப்படும் வடிகட்டியில், வண்டல் வடிகட்டி, கார்பன் வடிகட்டி, யு.வி. வடிகட்டி, ஆர்.ஓ. வடிப்பான் கள் என பல வகைகள் உள்ளன. உங்கள் வீட்டில் உள்ள தண்ணீரின் தரத்திற்கு ஏற்ற வடிகட்டி பொருத்தப்பட்டுள்ள சுத்திகரிப்பு கருவியை தேர்ந்தெடுப்பது நல்லது.

    குளோரின், காப்பர், இரும்பு, ஈயம். பி.எச். சோதனைகளை செய்த பிறகு குடிநீர் சுத்திகரிப்பு கருவியை வாங்குவது நல்லது. சுத்திகரிப்பு கருவியில் உள்ள வடிகட்டியை அவ்வப்போது மாற்றி அமைக்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் குடிநீர் சுத்திகரிப்பு கருவியை அமைக்க வேண்டும். தண்ணீரை நேரடியாக பயன்படுத்துவதை தவிர்த்து. தொட்டி அமைத்து அதில் நீரை சேகரித்து பின்னர் அதை கத்திகரிப்பு கருவி மூலம் சுத்தப்படுத்தலாம்.

    ×