search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இடைத்தேர்தலில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றுகிறது நவாஸ் ஷெரீப் கட்சி
    X

    இடைத்தேர்தலில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றுகிறது நவாஸ் ஷெரீப் கட்சி

    • பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் கட்சி பிலாவல் பூட்டோ கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளது.
    • வாக்கு எண்ணிக்கையின்போது முறைகேடு நடைபெற்றதாக புகார் அளிக்கப்பட்டதால் சில இடங்களில் மறுத்தேர்தல்.

    பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி மாதம் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாகாணங்களுக்கான உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. மேலும், இம்ரான் கான் கட்சி தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக புகார் அளித்தது. இதன்தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

    அதனடிப்படையில் 21 பாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாகாணங்களின் உறுப்பினர் இடங்களுக்கு நேற்று மறுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

    இதில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பி.எம்.எல்.-என்), பாகிஸ்தான் தெரீக்-இ-இன்சாம் ஆதரவு பெற்ற சன்னி இட்டேஹாத் கவுன்சில் (எஸ்ஐசி), பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.

    தேர்தல் ஆணையம் இன்னும் அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவை அறிவிக்கவில்லை. ஆனால் தனியார் மீடியாக்கள் தேர்தல் முடிவுகள் குறித்து செய்தி வெளியிட்டுள்ளன.

    அதனடிப்படையில் நவாஸ் ஷெரீப் கட்சி இரண்டு தேசிய உறுப்பினர் இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. பாகிஸ்தான் மக்கள் கட்சி, சன்னி இட்டேஹாத் கவுன்சில் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சையாக நின்ற ஒருவரும் வெற்றி பெற்றுள்ளார்.

    மாகாணங்களுக்கான உறுப்பினரில் 16 இடங்களில் 10 இடங்களில் நவாஸ் ஷெரீப் கட்சி பெற்றி பெற்றுள்ளது.

    பாகிஸ்தான் மக்கள் கட்சி, எஸ்ஐசி, இஸ்டெகாம் பாகிஸ்தான் கட்சி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக், பலுசிஸ்தான் தேசிய கட்சி ஆகியவை தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சையாக நின்றவர்களில் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

    இடைத்தேர்தலின்போது ஆங்காங்கே சிறிய வன்முறைகள் ஏற்பட்டன. பஞ்சாப் மாகாணத்தில் பிடிஐ கட்சி வாக்காளர்களுடன் நடைபெற்ற மோதலின்போது நவாஸ் ஷெரீப் கட்சி தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார். இருந்தபோதிலும் ஒட்டுமொத்தமாக சட்டம் ஒழங்கு கட்டுக்குள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது.

    தேர்தலின்போது சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு காரணமாக பஞ்சாப் மற்றும் பலுசிஸ்தானில் இணையதளங்கள் முடக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×