search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் 36-வது முறையாக நீட்டிப்பு

    • கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்த்துறை கைது செய்தது.
    • 36-வது முறையாக ஜூன் 14-ந்தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தமிழக அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவரை கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்த்துறை கைது செய்தது. அமலாக்கத்துறை சில நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. அதன்பின் நீதிமன்ற காவலில் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ஜாமின் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் மனு தாக்கல் செய்தார். எங்கும் அவருக்கு ஜாமின் கிடைக்கவில்லை.

    இதனால் அவரது நீதிமன்றம் காவல் நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், காணொலி மூலம் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஜூன் 4-ந்தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

    இதன்மூலம் 36-வது முறையாக செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×