search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தூத்துக்குடியில் உப்பு விலை திடீர் உயர்வு
    X

    தூத்துக்குடியில் உப்பு விலை திடீர் உயர்வு

    • கடந்த டிசம்பர் மாதம் டன் ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையான பழைய உப்பின் விலை தற்போது தரத்துக்கு ஏற்ப ஒரு டன் ரூ.4 ஆயிரம் வரையிலும் விற்பனையாகிறது.
    • புதிதாக உற்பத்தியாகி வரும் உப்பு ஒரு டன் ரூ.1,500 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனையாகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் உப்பளங்கள் மூழ்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி தாமதமாக தொடங்கியது. தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் உப்பு உற்பத்தி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

    இதனால் தூத்துக்குடியில் உப்பு விலை திடீரென உயர்ந்து உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் டன் ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையான பழைய உப்பின் விலை தற்போது தரத்துக்கு ஏற்ப ஒரு டன் ரூ.4 ஆயிரம் வரையிலும் விற்பனையாகிறது. அதேநேரத்தில் புதிதாக உற்பத்தியாகி வரும் உப்பு ஒரு டன் ரூ.1,500 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனையாகிறது.

    உப்பு விலை உயர்ந்து காணப்படுவதால், தூத்துக்குடியில் இருந்து உப்பு இறக்குமதி செய்த கேரளா, கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள், தற்போது குஜராத்தில் இருந்து உப்பு இறக்குமதி செய்ய தொடங்கி உள்ளனர். இதனால், தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    Next Story
    ×