search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    திருமலை மடத்தில் இன்று சாதுர்மாஸ்ய விரதம் தொடக்கம்
    X

    திருமலை மடத்தில் இன்று சாதுர்மாஸ்ய விரதம் தொடக்கம்

    • இன்று திருமலை மடத்தில் சாதுர்மாஸ்ய தீட்சை சங்கல்பம் வெகு சிறப்பாக நடத்தப்பட உள்ளது.
    • பெரிய ஜீயர் சுவாமி புஷ்கரணிக்கும், வராகசாமி கோவிலுக்கும் செல்கிறார்.

    திருமலையில் உள்ள மடத்தில் பெரிய ஜீயர், சின்ன ஜீயர் சுவாமிகள் இணைந்து சாதுர்மாஸ்ய விரதத்தைத் இன்று (3-ந்தேதி) தொடங்குகிறார்கள். ஆனிமாத சுக்லபட்ச ஏகாதசி அன்று யோக நித்திரைக்கு செல்லும் மகா விஷ்ணு கார்த்திகை மாத சுக்ல பட்ச ஏகாதசி அன்று விழி திறப்பதாக ஐதீகம்.

    அவர், யோக நித்திரைக்கு செல்லும் புண்ணிய மாதங்களான சிராவணம், பாத்ரபதம், ஆஸ்வயுஜம், கார்த்திகை ஆகிய மாதங்கள் 'சாதுர்மாஸ்யம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த முக்கிய மாதங்களில் அதிகாலை எழுந்து ஆச்சாரியர்கள், துறவிகள், ஆன்மிகவாதிகள் புனித நீராடி விட்டு யாகம், தவம், அனுஷ்டானங்கள் உள்ளிட்டவற்றை உலக நன்மைக்காக செய்வார்கள். அதன்படி வைணவ ஆச்சாரியார் வழிவந்த பரம்பரையைச் சேர்ந்த திருமலை மடத்தின் ஜீயர்கள் சாதுர்மாஸ்ய விரதத்தை இன்று தொடங்குகிறார்கள். இன்று திருமலை மடத்தில் சாதுர்மாஸ்ய தீட்சை சங்கல்பம் வெகு சிறப்பாக நடத்தப்பட உள்ளது.

    பேடி ஆஞ்சநேயர் கோவிலை அடுத்துள்ள ஜீயர் மடத்தில் சீடர்களுடன் பெரிய ஜீயர் சுவாமி புஷ்கரணிக்கும், வராகசாமி கோவிலுக்கும் செல்கிறார். அதன் பிறகு ஏழுமலையான் கோவில் மகா துவாரத்தை அடைந்ததும் தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர், கோவில் அதிகாரிகள் முறைப்படி வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் செல்கிறார்கள்.

    கோவிலில் மூலவர் ஏழுமலையானை சாமி தரிசனம் செய்ததும், ரெங்கநாயக்கர் மண்டபத்தில் பெரிய ஜீயருக்கு மேல்சாட் வஸ்திரமும், சின்ன ஜீயருக்கு நூல்சாட் வஸ்திரமும் அளிக்கப்படுகிறது.

    நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

    Next Story
    ×