search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    இந்த கோவிலில் அர்ச்சனை செய்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை விலகும்...
    X

    இந்த கோவிலில் அர்ச்சனை செய்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை விலகும்...

    • அருணகிரிநாதர் இத்தல முருகனை குறித்து திருப்புகழ் பாடி உள்ளார்.
    • முருகப்பெருமான் சூரனை அழித்து தேவர்களை காத்தார்.

    அம்மனின் 64 சக்தி பீடங்களில் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலும் ஒன்று. விசுவாமித்திரர், அகத்தியர், காத்தியாயனர், நாரதர், முசுகுந்த சக்கரவர்த்தி ஆகியோர் இத்தலத்தில் வழிபாடு செய்து உள்ளனர். சிவன், பெருமாள், முருகன், அனுமன் என 4 பேரும் இத்தலத்தில் அருள்பாலிப்பது இக்கோவிலின் சிறப்பாகும்.

    அருணகிரிநாதர் இத்தல முருகனை குறித்து திருப்புகழ் பாடி உள்ளார். கோச்செங்கட் சோழன் கட்டிய 72 மாட கோவில்களில் இதுவும் ஒன்று.

    தேவர்கள், சூரபத்மனிடமிருந்து தங்களை காக்க முருகப்பெருமானுக்கு 'திரி சதை' செய்து வேண்டி கொண்டனர். இதனால் முருகப்பெருமான் சூரனை அழித்து தேவர்களை காத்தார்.

    சிங்கார வேலவனுக்கு, அம்மன் தன் சக்தியை வேலாக வழங்கிய இத்தல முருகனுக்கு "சத்ரு சம்ஹார திரி சதை" அர்ச்சனை செய்தால் எதிரிகள் தொந்தரவு விலகி நலம் விளையும் என்பது ஐதீகம்.

    சிக்கல் சிங்காரவேலவரை தரிசித்தால் சிக்கல்கள் யாவும் நீங்கிடும் என்பது ஐதீகம்.

    இந்த கோவில் தமிழகத்தில் நாகப்பட்டினம் அருகே சிக்கல் என்கிற கிராமத்தில் அமைந்துள்ளது. திருவாரூரிலிருந்து 18 கி.மீ தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து மேற்கே 5 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

    Next Story
    ×