search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    களத்திர தோஷத்தால் ஆண்களுக்கு ஏற்படும் திருமண தடை விலக பரிகாரம்...
    X

    களத்திர தோஷத்தால் ஆண்களுக்கு ஏற்படும் திருமண தடை விலக பரிகாரம்...

    • சிவன் பார்வதி படத்திற்கு விளக்கேற்றி வணங்க வேண்டும்.
    • இந்த பரிகாரத்தை 40 நாட்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும்.

    களத்திர தோஷத்தால் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் திருமணம் நடைபெறாமல் அவதிப்படுகின்றனர். திருமண தடை நீங்க இந்த பரிகாரம் நல்ல பலனைத்தரும் என்று நிச்சயம்.

    சந்தன கட்டிகள் 7, வெள்ளை கற்கண்டு 7, ஒரு ரூபாய் நாணயம் 7, பச்சரிசி சரியாக 70 கிராம், லவங்கம் 7, பூநூல் 7 மச்சள் தடவாமல் , வெள்ளை மலர் 7, வெள்ளை பட்டு 70 cm

    மேற்கண்ட பொருள் அனைத்தையும் மஞ்சள் துணியில் முடிந்து சிவன் பார்வதி இணைந்த படத்திற்கு முன்பாக வைத்து நெய் தீபம் ஏற்றி தனக்கு திருமணம் விரைவாக அமைய வேண்டும் என்று மானசீகமாக வேண்டிய பின் , அந்த முடிச்சினை சிவன் பார்வதி படத்திற்கு பின்புறம் வைக்க வேண்டும்.

    40 நாட்கள் தொடர்ந்து அந்த சிவன் பார்வதி படத்திற்கு விளக்கேற்றி வணங்க வேண்டும். 40-து நாள் நாள் காலை குளித்து விநாயகரை வணங்கி சிதறு தேங்காய் ஒன்று உடைத்து, குலதெய்வத்தை மனதார எண்ணி, குலதெய்வம் அருகில் இருந்தால் கோவிலுக்கு சென்று வரவும். பின் காணிக்கை முடிச்சை சிவன் பார்வதி இணைந்து(தனித்தனி சந்நிதியில் இருந்தாலும் செய்யலாம்) உள்ள கோவில் அர்ச்சகருக்கு தரலாம் அல்லது கோவில் விருட்சத்தின் கிளையில் கட்டலாம்.

    இதனை காலை நேரத்தில் செய்வது சிறப்பு. நிச்சயமாக எப்பேற்பட்ட களத்திர தோஷமும் நீங்கி திருமண பாக்கியத்தை பெறலாம்.

    Next Story
    ×