என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
X
புனித உபகார அன்னை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Byமாலை மலர்17 May 2022 3:56 AM GMT (Updated: 17 May 2022 3:56 AM GMT)
காவல்கிணறு இயேசுவின் திரு இருதய ஆலயத்தில் புனித உபகார அன்னை திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடக்கிறது.
காவல்கிணறு இயேசுவின் திரு இருதய ஆலயத்தில் புனித உபகார அன்னை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் கொடியேற்றினார். விழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடக்கிறது. 8-ம் திருநாள் காலை திருப்பலியில் சிறுவர், சிறுமிகளுக்கு புதுநன்மை வழங்கப்படுகிறது. இரவு 8 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது.
9-ம் திருநாள் மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் திருவிழா மாலை ஆராதனையும், இரவு 10 மணிக்கு தேர் பவனியும் நடக்கிறது. 10-ம் திருநாளான வருகிற 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் திருவிழா திருப்பலி மற்றும் உறுதிப்பூசுதல் விழா நடக்கிறது.
பிற்பகல் 3 மணிக்கு அன்னையின் தேர் பவனியும், மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடக்கிறது. இரவு இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. 11-ம் திருநாள் மாலை 6 மணிக்கு பொது அசனம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தைகள் ஆரோக்கியராஜ், வினித்ராஜா மற்றும் பங்கு மேய்ப்பு பணி குழுவினர் செய்து வருகின்றனர்.
9-ம் திருநாள் மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் திருவிழா மாலை ஆராதனையும், இரவு 10 மணிக்கு தேர் பவனியும் நடக்கிறது. 10-ம் திருநாளான வருகிற 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் திருவிழா திருப்பலி மற்றும் உறுதிப்பூசுதல் விழா நடக்கிறது.
பிற்பகல் 3 மணிக்கு அன்னையின் தேர் பவனியும், மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடக்கிறது. இரவு இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. 11-ம் திருநாள் மாலை 6 மணிக்கு பொது அசனம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தைகள் ஆரோக்கியராஜ், வினித்ராஜா மற்றும் பங்கு மேய்ப்பு பணி குழுவினர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X