அறிந்து கொள்ளுங்கள்

இந்தியாவில் 7 கோடி அக்கவுண்ட்களை தடை செய்த வாட்ஸ்அப் - ஏன் தெரியுமா?

Published On 2024-05-03 10:36 GMT   |   Update On 2024-05-03 10:36 GMT
  • அறிக்கையை வாட்ஸ்அப் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.
  • இந்தியாவில் சுமார் ஏழு கோடி அக்கவுண்ட்கள் தடை செய்யப்பட்டது.

இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 7 கோடி வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை தடை செய்துள்ளதாக மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி மோசடி மற்றும் தேவையற்ற விளம்பர தொந்தரவுகள் குறித்து தங்களுக்கு கிடைக்கும் அனைத்துவிதமான குற்றச்சாட்டுகளையும் தீவிரமாக விசாரணை செய்து வருவதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப விதிகள் பிரிவு 4(1) (d)-இன் கீழ் வாட்ஸ்அப் மோசடிகள் தொடர்பான புகார் விசாரிக்கப்பட்டு வருகிறது.

தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-இன் கீழ் வாட்ஸ்அப் தொடர்பான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை விளக்கும் அறிக்கையை வாட்ஸ்அப் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. அவ்வாறு வெளியிடப்பட்ட அறிக்கையில் தான் இந்தியாவில் சுமார் ஏழு கோடி அக்கவுண்ட்கள் தடை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டு மார்ச் 1 ஆம் தேதியில் இருந்து 31 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் வாட்ஸ்அப் சுமார் 7.9 மில்லியன் அக்கவுண்ட்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 31 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் வாட்ஸ்அப் சுமார் 69 மில்லியன் அக்கவுண்ட்களை தடை செய்துள்ளது. 

Tags:    

Similar News