இந்தியா

கோவிஷீல்டு தடுப்பூசி பக்கவிளைவு: இந்திய டாக்டர்கள் சொல்வது என்ன?

Published On 2024-05-01 05:57 GMT   |   Update On 2024-05-01 06:55 GMT
  • இந்தியாவில் சுமார் 175 கோடிக்கும் அதிகமான கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
  • இது ஒன்றும் புதிய தகவல் இல்லை என இந்திய மருத்துவர்கள் தெரிவித்தனர்.

புதுடெல்லி:

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கொரோனா தடுப்பூசியை பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தன.

இதில் இங்கிலாந்தைச் சேர்ந்த அஸ்ட்ராஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து தடுப்பூசியை உருவாக்கின. இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது. பல நாடுகளில் இந்த தடுப்பூசிதான் போடப்பட்டது.

இந்தியாவில் சுமார் 175 கோடிக்கும் அதிகமாக கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்படும் என அஸ்ட்ராஜெனகா நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது குறித்து இந்திய மருத்துவர்கள் கூறியதாவது:

இது ஒன்றும் புதிய தகவல் இல்லை. பொதுமக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே கோவிஷீல்டு தடுப்பூசி குறித்த எச்சரிக்கையை நன்கு அறிவோம்.

இந்த தடுப்பூசி செலுத்துவதால் அரிதான ரத்த உறைவு ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு மிகக் குறைந்த ஆபத்தை அறிவித்தது.

இங்கிலாந்தில் ஒரு மில்லியன் பேருக்கு 4 வழக்குகள், ஐரோப்பிய ஒன்றியத்தில் 1,00,000 பேருக்கு ஒரு வழக்கு, இந்தியாவில் ஒரு மில்லியன் டோசுக்கு 0.61 வழக்கு பதிவாகியுள்ளது என தெரிவித்தனர்.

Tags:    

Similar News