இந்தியா

முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப்-ஐ புகழ்பவர்களுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது - மோடி

Published On 2024-04-28 15:13 GMT   |   Update On 2024-04-28 15:13 GMT
  • நவாப்கள், நிஜாம்கள், சுல்தான்கள், பாத்ஷாக்கள் செய்த அட்டூழியங்களைப் பற்றி வயநாடு எம்பி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை
  • முகலாயப் பேரரசர் ஔரங்கசீப், நமது ஆயிரக்கணக்கான கோவில்களை அழித்ததை காங்கிரஸ் மறந்துவிட்டதாக தெரிகிறது

கர்நாடகாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி "பல ராஜாக்கள், மகாராஜாக்கள் நம்மை மீண்டும் ஆட்சி செய்தனர். அவர்கள் விரும்பியதைச் செய்து, விவசாயிகளின் நிலத்தை விருப்பப்படி பறித்தார்கள்.

காங்கிரசும் அதன் தொண்டர்களும்தான், சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் சேர்ந்து, ஒடுக்குமுறையாளர்களிடமிருந்து இந்திய மக்களுக்கு சுதந்திரம் அளித்து, நாட்டில் ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் மீட்டெடுத்தார்கள் என்று பேசியிருந்தார்.

ராகுல்காந்தியை இந்த பேச்சிற்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவின் பெலகாவியில் இன்று நடைபெற்ற மெகா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், "காங்கிரஸ் கட்சியின் இளவரசன் (ராகுல்காந்தி), அன்றைய நமது ராஜாக்களும், மகாராஜாக்களும் இரக்கமற்றவர்கள் என்றும் அவர்கள் ஏழைகளின் எளிய சொத்துக்களைப் பறித்தனர்.

சத்ரபதி சிவாஜி மகாராஜ் மற்றும் கிட்டூர் இராணி சென்னம்மா ஆகியோரின் நல்லாட்சி மற்றும் தேசபக்தி இன்னும் நம்மை தேசப் பெருமையையும் கௌரவத்தையும் நிரப்புகின்றன. அப்படிப்பட்டவர்கர்களை ராகுல்காந்தி அவமதித்துள்ளார்.

நாம் அனைவரும் மிகவும் உயர்வாகக் கருதும், பெருமைப்படும் மைசூர் அரச குடும்பத்தின் பங்களிப்பு பற்றி அவருக்குத் தெரியாதா?

நவாப்கள், நிஜாம்கள், சுல்தான்கள், பாத்ஷாக்கள் செய்த அட்டூழியங்களைப் பற்றி வயநாடு எம்பி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை.

முஸ்லிம் பேரரசர்கள் தங்கள் விவசாயிகளுக்கு இழைத்த அத்துமீறல்கள் மற்றும் அட்டூழியங்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் மௌனமாக இருக்கிறார்.

முகலாயப் பேரரசர் ஔரங்கசீப், நமது ஆயிரக்கணக்கான கோவில்களை அழித்ததை காங்கிரஸ் மறந்துவிட்டதாகத் தெரிகிறது.

ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் வாக்கு வங்கியை பெறுவதற்காக அவர் பேசுகிறார். ராகுலுக்கு கவலை அளிப்பது அவரது வாக்கு வங்கி மட்டுமே.

நமது புனிதத் தலங்களை அழித்த, கொள்ளையடித்த, நம் மக்களைக் கொன்று குவித்த கால்நடைகளையும் படுகொலை செய்த மன்னர்களைப் பற்றி அவர் பேசுவதில்லை

முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப்-ஐ புகழ்ந்து பேசுவபர்கள் உடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது

பெனாரஸ் இந்து பல்கலைக்கழகம் அந்நாளில் நகரத்தை ஆண்ட அரசரின் உதவியின்றி நிறுவப்பட்டிருக்க முடியாது.

பரோடாவின் மகாராஜா கெய்க்வாட், பாபா சாகேப் அம்பேத்கரை வெளிநாட்டில் உயர்கல்வி படிக்க உதவியிருக்கிறார்.

இதெல்லாம் காங்கிரசின் இளவரசனுக்கு தெரியாது" என்று அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News