செய்திகள்
முக ஸ்டாலின் பிரச்சாரம் செய்த காட்சி.

மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதை வாபஸ் பெறவைத்தது திமுக தான் - மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

Published On 2019-07-27 16:02 GMT   |   Update On 2019-07-27 16:02 GMT
மும்மொழிக் கொள்கைக்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து, அதை வாபஸ் பெறவைத்தது திமுக தான் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேலூர்:

வேலூர் மக்களவை தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- 

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க குடியாத்தம் கே.வி.குப்பம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும். காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை வேலூர் மாவட்டம் முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.  

நாங்கள் மிட்டாய் கொடுத்து ஏமாற்றியதாக கூறுகிறீர்கள். நீங்கள் அல்வா கொடுத்து ஏமாற்றியதாக நான் கூறுகிறேன். மும்மொழிக் கொள்கைக்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து, அதை வாபஸ் பெறவைத்தது திமுக தான். சூழ்ச்சியை, சதியை மக்கள் முறியடித்துள்ளார்கள். ஆட்சி இன்னும் ஒரு மாதத்தில் என்ன ஆகும் என்பது தெரியும். 

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News