ஆன்மிக களஞ்சியம்

பிரத்யங்கரா தேவி அவதார கதை-வரம் வேண்டிய இரணிய கசிபு

Published On 2024-05-05 09:59 GMT   |   Update On 2024-05-05 09:59 GMT
  • “இரணிய கசிபு” அரக்கர் குலத் தலைவன். இவன் தேவர்களை வெல்வதற்கு வரம் வேண்டி, கடுமையான தவம் செய்தான்.
  • அதற்கு இரணிய கசிபு தனக்கு மரணமே வரக்கூடாது என்ற வரத்தைக் கோரினார்.

"இரணிய கசிபு" அரக்கர் குலத் தலைவன். இவன் தேவர்களை வெல்வதற்கு வரம் வேண்டி, கடுமையான தவம் செய்தான்.

அவனுடைய கடும் தவத்தினை மெச்சி சிவபெருமான் அவன்முன் தோன்றினார். ""என்ன வரம் வேண்டும்?"" என்று கேட்டார்.

அதற்கு இரணிய கசிபு தனக்கு மரணமே வரக்கூடாது என்ற வரத்தைக் கோரினார்.

ஆனால், சிவபெருமான் அந்த வரத்தைத் தராது உன் விருப்பப்படியே இறக்கும் வரத்தைத் தருகிறேன்.

நீ எப்படி இறக்க விரும்புகிறாய் என்று கேட்டார்.

இரணிய கசிபும், "ஐம்பூதங்கள், ஆயுதக் கருவிகள், வானவர், மனிதர், பறவை, விலங்கு யாராலும் எனக்கு மரணம் நேரக்கூடாது. இரவு நேரத்திலும் மரணம் வரக்கூடாது.

பகலிலும் மரணம் வரக்கூடாது" என்ற வரத்தினைக் கேட்டான்.

சிவபெருமானும் அவன் கோரியபடியே வரத்தினை அளித்தார்.

Tags:    

Similar News