என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
வளையல் போல் அணிந்து கொள்ளும் வசதியை வழங்கும் புதிய ஸ்மார்ட்போன் கண்டுபிடிப்பு
Byமாலை மலர்11 Jan 2017 3:38 PM GMT (Updated: 11 Jan 2017 3:38 PM GMT)
கையில் வளையில் போல் மாட்டி கொள்ளும் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம்..
சான்பிரான்சிஸ்கோ:
இனி யாரும் ஸ்மார்ட்போன்களை கைகளிலும், பாக்கெட்களிலும் தூக்கி செல்ல வேண்டாம், வளையல் போல் மாட்டி கொள்ளலாம் என அமெரிக்க நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. அதன் படி இந்நிறுவனம் தயாரித்துள்ள ப்ரோட்டோடைப் ஸ்மார்ட்போனினை கையில் வளையல் போல் அணிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கையில் அணிந்திருக்கும் போது வரும் அழைப்புகளை ஸ்பீக்கர் மூலம் அப்படியே ஏற்கவும் முடியும், கையில் இருந்து கழற்றி எடுத்து வழக்கமான ஸ்மார்ட்போன் போன்று மாற்றி காதில் வைத்தும் பேச முடியும். பின் பேசி முடித்ததும் மீண்டும் கையில் மாட்டி கொள்ளலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஃப்ளெக்ஸ் போன் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனினை ராயல் கார்ப்பரேஷன் எனும் அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த சாதனத்தை ஃபிட்னஸ் டிராக்கர் போன்றும் பயன்படுத்தலாம். இதில் இதயத் துடிப்பை டிராக் செய்யும் சென்சார் உள்ளிட்ட சில அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
6 மில்லி மீட்டர் தடிமன் மற்றும் 100 கிராம் எடை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் உடற்பயிற்சி செய்யும் போதும் எவ்வித இடையூறையும் ஏற்படுத்தாது. கூடுதலாக இதன் டிஸ்ப்ளே முழுமையாக வளையும் தன்மை கொண்டுள்ளதால் போன் கீழே விழும் என்ற அச்சமும் இந்த ஸ்மார்ட்போனில் எழாது. இத்துடன் இதன் வளையும் தன்மையானது கீழே விழுந்தாலும் அதிக சேதாரம் ஆகாதபடி பர்த்து கொள்ளும்.
3ஜி கனெக்டிவிட்டி ஆப்ஷன் கொண்டுள்ள ப்ளெக்ஸ் ஸ்மார்ட்போன் சிம் கார்டு வசதி மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. வளையும் தன்மை கொண்ட இந்த ஸ்மார்ட்போனிற்கு சமீபத்தில் நடந்து முடிந்த நுகர்வோர் மின்சாதன விழாவில் சிறப்பு விருது வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X