என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
கைரேகை ஸ்கேனர் கொண்ட மோட்டோ இசட் (2017) புகைப்படம் இணையத்தில் லீக் ஆனது
Byமாலை மலர்11 March 2017 8:34 PM GMT
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ இசட் (2017) ஸ்மார்ட்போனின் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது.
மோட்டோ இசட் ஸ்மார்ட்போன் மற்றும் மோட்டோ மாட்ஸ் சாதனங்களை வெளியிட்ட மோட்டோரோலா இந்த ஆண்டு மேம்படுத்தப்பட்ட மோட்டோ இசட் (2017) ஸ்மார்ட்போனினை வெளியிட இருக்கிறது. இதோடு மோட்டோ இசட் (2017) ஸ்மார்ட்போனுடன் வழங்கப்பட இருக்கும் புதிய மோட்டோ மாட்ஸ் மற்றும் புதிய தொழில்நுட்பத்தினை அந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்தது.
இந்நிலையில் தற்சமயம் கசிந்துள்ள புதிய புகைப்படத்தில் மோட்டோ இசட் (2017) ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் வசதி வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. இத்துடன் புதிய மோட்டோ மாட்ஸ், 5.5 இன்ச் டிஸ்ப்ளே உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் கேம்பேட் மோட், வழங்கப்படுவது உறுதியாகி்யுள்ளது. பிரீமியம் பிரிவில் வெளியாக இருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் உயர்-ரக சிறப்பம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது.
மோட்டோ இசட் (2017) பதிப்பில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், ஸ்ப்ரின்ட் ஜிகாபிட் எல்டிஇ கொண்டிருக்கும் என கூறப்படுகி்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X