search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    உலகின் முதல் டாங்கோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரிலீஸ் ஆனது
    X

    உலகின் முதல் டாங்கோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரிலீஸ் ஆனது

    உலகின் முதல் டாங்கோ ஸ்மார்ட்போனான லெனோவோ ஃபேப் 2 ப்ரோ இந்தியாவில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான லெனோவோ உலகின் முதல் டாங்கோ ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை லெனோவோ நேற்று அறிவித்தது. பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள லெனோவோ ஃபேப் 2 ப்ரோவின் விலை ரூ.29,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    கூகுள் நிறுவனத்தின் டாங்கோ குழுவினர் உருவாக்கிய முதல் வணிக ரீதியான ஸ்மார்ட்போனாக லெனோவோ ஃபேப் 2 ப்ரோ இருக்கிறது. இதன் சிறப்பம்சங்களை பொருத்த வரை 6.4 இன்ச் QHD IPS டிஸ்ப்ளே மற்றும் நான்கு கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    அதன் படி 8 எம்பி செல்ஃபி கேமரா, 16 எம்பி பிரைமரி RGB கேமரா, டெப்த்-சென்சிங் இன்ஃப்ராரெட் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமராவானது இமேஜர், எமிட்டர் மற்றும் மோஷன் டிராக்கிங் கேமரா போன்று செயல்படுகிறது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 652 சிப்செட் மற்றும் 4ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. 

    மெமரியை பொருத்த வரை 64ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள ஃபேப் 2 ப்ரோ இரண்டு ஸ்லாட்டிலும் நானோ சிம் கார்டு வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    லெனோவோ ஃபேப் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் 4050 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.இத்துடன் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.
    Next Story
    ×