என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
சாம்சங் உருவாக்கி வரும் கேலக்ஸி டேப் S3: புதிய தகவல்கள்
Byமாலை மலர்28 Jan 2017 2:19 PM GMT (Updated: 28 Jan 2017 2:19 PM GMT)
சாம்சங் நிறுவனத்தின் புதிய டேப்லெட் சாதனத்தின் சிறப்பம்சங்கள் ஜிஎஃப்எக்ஸ்பென்ச் (GFXbench) தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சியோல்:
சாம்சங் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் டேப்லெட்டான ‘கேலக்ஸி டேப் S3’ சார்ந்த தகவல்கள் ஜிஎஃப்எக்ஸ்பென்ச் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த டேப்லெட் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து இம்முறை வெளியாகியிருக்கும் தகவல்களில், இந்த சாதனத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் படி புதிய டேப்லெட்டில் 2.1 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 820 சிப்செட் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் எக்சைனோஸ் 7420 சிப்செட் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்துடன் 9.6 இன்ச் 2048x1536 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்படலாம்.
மெமரியை பொருத்த வரை 4ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது. மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி குறித்து எவ்வித தகவலும் இல்லை. இத்துடன் புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.
சாம்சங் கேலக்ஸி S3 டேப்லெட்டில் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது. தற்சமயம் வரை இந்த சாதனத்தின் வெளியீட்டு தேதி குறித்து எவ்வித தகவலும் இல்லை. சாம்சங் சார்பில் புதிய டேப்லெட் சாதனம் வெளியிடுவது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
தற்சமயம் வரை சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக கூறப்படுகின்றது. அதன் படி சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன் மார்ச் மாதம் விற்பனைக்கு வரும் என இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
சாம்சங் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் டேப்லெட்டான ‘கேலக்ஸி டேப் S3’ சார்ந்த தகவல்கள் ஜிஎஃப்எக்ஸ்பென்ச் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த டேப்லெட் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து இம்முறை வெளியாகியிருக்கும் தகவல்களில், இந்த சாதனத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் படி புதிய டேப்லெட்டில் 2.1 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 820 சிப்செட் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் எக்சைனோஸ் 7420 சிப்செட் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்துடன் 9.6 இன்ச் 2048x1536 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்படலாம்.
மெமரியை பொருத்த வரை 4ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது. மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி குறித்து எவ்வித தகவலும் இல்லை. இத்துடன் புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.
சாம்சங் கேலக்ஸி S3 டேப்லெட்டில் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது. தற்சமயம் வரை இந்த சாதனத்தின் வெளியீட்டு தேதி குறித்து எவ்வித தகவலும் இல்லை. சாம்சங் சார்பில் புதிய டேப்லெட் சாதனம் வெளியிடுவது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
தற்சமயம் வரை சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக கூறப்படுகின்றது. அதன் படி சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன் மார்ச் மாதம் விற்பனைக்கு வரும் என இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X