என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி புதிய ஏவுகணையை பரிசோதித்த ஈரான்
Byமாலை மலர்23 Sep 2017 8:12 AM GMT (Updated: 23 Sep 2017 8:12 AM GMT)
அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி நடுத்தர தூரம் சென்று இலக்கை தாக்கும் புதிய ஏவுகணையை ஈரான் வெற்றிகமாக பரிசோதித்துள்ளது.
டெஹ்ரான்:
அணு ஆயுதங்கள் தயாரிப்பு, ஏவுகணை பரிசோதனை போன்றவற்றில் ஈடுபட்டு வந்த பாரசீக வளைகுடா நாடுகளில் ஒன்றான ஈரான், சர்வதேச நாடுகளின் தடையை மீறி ஏவுகணை பரிசோதனை செய்யப் போவதாக அறித்திருந்தது. அதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற ராணுவ அணிவரிசையில் ஈரான் தயாரித்த புதிய ஏவுகணையான கோராம்ஷர் ஏவுகணை இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், நடுத்தர தூரம் சென்று இலக்கை தாக்கி அழிக்கும் அந்த புதிய ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்து விட்டதாக ஈரான் அரசு இன்று அறிவித்துள்ளது.
இது போன்ற அணு ஆயுத சோதனை நடத்துவது 2015-ம் ஆண்டில் போடப்பட்ட அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை மீறுவதாகும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். அவரது எச்சரிக்கையை மீறி ஈரான் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏவுகணை பல ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் திறன் வாய்ந்தது. இதன் மூலம் அருகில் உள்ள நாடுகளான இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியாவை எளிதில் தாக்கலாம். மேலும், இது நாட்டின் ராணுவ சக்தி மற்றும் பாதுகாப்பை அதிகப்படுத்துவதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
அணு ஆயுதங்கள் தயாரிப்பு, ஏவுகணை பரிசோதனை போன்றவற்றில் ஈடுபட்டு வந்த பாரசீக வளைகுடா நாடுகளில் ஒன்றான ஈரான், சர்வதேச நாடுகளின் தடையை மீறி ஏவுகணை பரிசோதனை செய்யப் போவதாக அறித்திருந்தது. அதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற ராணுவ அணிவரிசையில் ஈரான் தயாரித்த புதிய ஏவுகணையான கோராம்ஷர் ஏவுகணை இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், நடுத்தர தூரம் சென்று இலக்கை தாக்கி அழிக்கும் அந்த புதிய ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்து விட்டதாக ஈரான் அரசு இன்று அறிவித்துள்ளது.
இது போன்ற அணு ஆயுத சோதனை நடத்துவது 2015-ம் ஆண்டில் போடப்பட்ட அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை மீறுவதாகும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். அவரது எச்சரிக்கையை மீறி ஈரான் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏவுகணை பல ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் திறன் வாய்ந்தது. இதன் மூலம் அருகில் உள்ள நாடுகளான இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியாவை எளிதில் தாக்கலாம். மேலும், இது நாட்டின் ராணுவ சக்தி மற்றும் பாதுகாப்பை அதிகப்படுத்துவதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X