என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நடிகை பிரியங்கா சோப்ராவுடன் மலாலா சந்திப்பு: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
Byமாலை மலர்21 Sep 2017 6:05 AM GMT (Updated: 21 Sep 2017 6:05 AM GMT)
நடிகை பிரியங்கா சோப்ராவுடன் நோபல் பரிசு பெற்ற மலாலா நியூயார்க்கில் சந்தித்து பேசிய போது எடுக்கப்பட்ட படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நியூயார்க்:
அமைதிகான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் கடந்த இரண்டு மாதங்களாக டுவிட்டர் போன்ற இணையதளங்களின் மூலம் தனது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். உதாரணமாக ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் சேர்ந்தது போன்ற நிகழ்வுகளையும் பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில் யுனிசெப் நல்லெண்ண தூதுரான நடிகை பிரியங்கா சோப்ராவை மலாலா சந்தித்து பேசினார். நியூயார்க்கில் நடந்த இந்த சந்திப்பு குறித்து மலாலா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர், பிரியங்காவை சந்தித்ததை நம்ப முடியவில்லை என குறிப்பிட்டிருந்தார். அதற்கு பிரியங்கா மலாலாவை சந்தித்து பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக பதில் டுவிட் செய்திருந்தார்.
அப்போது அவர்கள் எடுத்த புகைப்படம் இணையதளங்களில் பதிவு செய்யப்பட்டது. தற்சமயம் இது வைரலாக பரவி வருகிறது.
மேலும், தங்கள் சந்திப்பு குறித்து பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமிலும் பதிவு செய்துள்ளார். மலாலாவின் தந்தை தனது தந்தையை ஞாபகப்படுத்துவதாக பிரியங்கா தெரிவித்தார். மேலும் மலாலாவை தனது சகோதரி என்றும் கூறினார்.
அமைதிகான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் கடந்த இரண்டு மாதங்களாக டுவிட்டர் போன்ற இணையதளங்களின் மூலம் தனது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். உதாரணமாக ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் சேர்ந்தது போன்ற நிகழ்வுகளையும் பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில் யுனிசெப் நல்லெண்ண தூதுரான நடிகை பிரியங்கா சோப்ராவை மலாலா சந்தித்து பேசினார். நியூயார்க்கில் நடந்த இந்த சந்திப்பு குறித்து மலாலா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர், பிரியங்காவை சந்தித்ததை நம்ப முடியவில்லை என குறிப்பிட்டிருந்தார். அதற்கு பிரியங்கா மலாலாவை சந்தித்து பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக பதில் டுவிட் செய்திருந்தார்.
அப்போது அவர்கள் எடுத்த புகைப்படம் இணையதளங்களில் பதிவு செய்யப்பட்டது. தற்சமயம் இது வைரலாக பரவி வருகிறது.
மேலும், தங்கள் சந்திப்பு குறித்து பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமிலும் பதிவு செய்துள்ளார். மலாலாவின் தந்தை தனது தந்தையை ஞாபகப்படுத்துவதாக பிரியங்கா தெரிவித்தார். மேலும் மலாலாவை தனது சகோதரி என்றும் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X