என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷிய தலையீடு: டிரம்ப் மருமகனிடம் எம்.பி.க்கள் விசாரணை
Byமாலை மலர்24 July 2017 6:32 PM GMT (Updated: 24 July 2017 6:32 PM GMT)
கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டு அடிப்படையில் டிரம்ப் மருமகனிடம் விசாரணை நடத்த அமெரிக்க பாராளுமன்றம் முடிவு செய்து உள்ளது.
வாஷிங்டன்:
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது அப்போது டிரம்புக்கு (தற்போதைய ஜனாதிபதி) ஆதரவாக ரஷியா செயல்பட்டதாக கூறப்பட்டது. இதுபற்றி அமெரிக்காவின் புலனாய்வுத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் ரஷிய அதிபர் மாளிகையுடன் நெருங்கிய தொடர்புகொண்ட ஒரு வக்கீலை கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியூயார்க் நகரில் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் சந்தித்ததாக சில நாட்களுக்கு முன்பாக பரபரப்பு தகவல் வெளியானது.
இதுபற்றி அவரிடம் விசாரணை நடத்த அமெரிக்க பாராளுமன்றம் முடிவு செய்து உள்ளது. இதையடுத்து, குஷ்னர் அமெரிக்க செனட் சபையின் புலனாய்வு குழு முன்பாக நேரில் ஆஜராகி வாக்கு மூலம் அளிக்கிறார்.
இதேபோல் பிரதிநிதிகள் சபையின் புலனாய்வு குழு முன்பாக இன்று அவர் ஆஜராகிறார். அப்போது டிரம்புக்கு ஆதரவாக செயல்பட ரஷியாவின் ஒத்துழைப்பு நாடப்பட்டதா? என்பது குறித்து 2 சபைகளின் எம்.பி.க்களும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புவார்கள் என்று தெரிகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது அப்போது டிரம்புக்கு (தற்போதைய ஜனாதிபதி) ஆதரவாக ரஷியா செயல்பட்டதாக கூறப்பட்டது. இதுபற்றி அமெரிக்காவின் புலனாய்வுத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் ரஷிய அதிபர் மாளிகையுடன் நெருங்கிய தொடர்புகொண்ட ஒரு வக்கீலை கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியூயார்க் நகரில் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் சந்தித்ததாக சில நாட்களுக்கு முன்பாக பரபரப்பு தகவல் வெளியானது.
இதுபற்றி அவரிடம் விசாரணை நடத்த அமெரிக்க பாராளுமன்றம் முடிவு செய்து உள்ளது. இதையடுத்து, குஷ்னர் அமெரிக்க செனட் சபையின் புலனாய்வு குழு முன்பாக நேரில் ஆஜராகி வாக்கு மூலம் அளிக்கிறார்.
இதேபோல் பிரதிநிதிகள் சபையின் புலனாய்வு குழு முன்பாக இன்று அவர் ஆஜராகிறார். அப்போது டிரம்புக்கு ஆதரவாக செயல்பட ரஷியாவின் ஒத்துழைப்பு நாடப்பட்டதா? என்பது குறித்து 2 சபைகளின் எம்.பி.க்களும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புவார்கள் என்று தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X