search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐரோப்பாவில் தாக்குதல் நடத்த தயார் நிலையில் 173 தற்கொலைப்படை தீவிரவாதிகள்: இண்டர்போல்
    X

    ஐரோப்பாவில் தாக்குதல் நடத்த தயார் நிலையில் 173 தற்கொலைப்படை தீவிரவாதிகள்: இண்டர்போல்

    ஐரோப்பிய நாடுகளில் தாக்குதல் நடத்த தயாராக உள்ள 173 ஐ.எஸ். தற்கொலைப்படை தீவிரவாதிகளின் பெயர்களை சர்வதேச போலீசார் (இண்டர்போல்) வெளியிட்டுள்ளனர்.

    பாரிஸ்:

    ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், பிரிட்டம் ஆகியவற்றில் கடந்த சில மாதங்களாக தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்து வருகின்றனர். கடந்த ஜூன் 3-ம் தேதி ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்ததோடு 48 பேர், காயமடைந்தனர். இதேபோல ஜூன் 22-ம் தேதி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர், மேலும் 119 பேர் காயமடைந்தனர்.

    இந்தாண்டு தொடக்கத்திலிருந்து ஜூன் 30-ம் தேதிவரை ஐரோப்பிய நாடுகளில் சுமார் 24 தீவிரவாத தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இத்தாக்குதல்களில் மட்டும் சுமார் 105 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

    இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த ஐ.எஸ். அமைப்பு திட்டமிட்டிருப்பதாக சர்வதேச போலீசார் (இண்டர்போல்) தெரிவித்துள்ளனர். மேலும், அந்த தாக்குதலை நடத்த அதிக வாய்ப்புள்ள 173 தீவிரவாதிகளின் பெயர்களையும் சர்வதேச போலீசார் வெளியிட்டுள்ளனர்.

    Next Story
    ×