என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐரோப்பாவில் தாக்குதல் நடத்த தயார் நிலையில் 173 தற்கொலைப்படை தீவிரவாதிகள்: இண்டர்போல்
Byமாலை மலர்22 July 2017 7:26 AM GMT (Updated: 22 July 2017 7:26 AM GMT)
ஐரோப்பிய நாடுகளில் தாக்குதல் நடத்த தயாராக உள்ள 173 ஐ.எஸ். தற்கொலைப்படை தீவிரவாதிகளின் பெயர்களை சர்வதேச போலீசார் (இண்டர்போல்) வெளியிட்டுள்ளனர்.
பாரிஸ்:
ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், பிரிட்டம் ஆகியவற்றில் கடந்த சில மாதங்களாக தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்து வருகின்றனர். கடந்த ஜூன் 3-ம் தேதி ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்ததோடு 48 பேர், காயமடைந்தனர். இதேபோல ஜூன் 22-ம் தேதி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர், மேலும் 119 பேர் காயமடைந்தனர்.
இந்தாண்டு தொடக்கத்திலிருந்து ஜூன் 30-ம் தேதிவரை ஐரோப்பிய நாடுகளில் சுமார் 24 தீவிரவாத தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இத்தாக்குதல்களில் மட்டும் சுமார் 105 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த ஐ.எஸ். அமைப்பு திட்டமிட்டிருப்பதாக சர்வதேச போலீசார் (இண்டர்போல்) தெரிவித்துள்ளனர். மேலும், அந்த தாக்குதலை நடத்த அதிக வாய்ப்புள்ள 173 தீவிரவாதிகளின் பெயர்களையும் சர்வதேச போலீசார் வெளியிட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X