என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுக்மா நக்ஸல் தாக்குதலுக்கு துருக்கி அரசு கண்டனம்
Byமாலை மலர்25 April 2017 7:48 PM GMT (Updated: 25 April 2017 7:49 PM GMT)
சுக்மா நக்ஸல் தாக்குதலில் 25 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அங்காரா:
சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் நக்சலைட்டுகள் அதிகம் உள்ள பகுதியாகும். இதனால் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சி.ஆர். பி.எப்.) அங்கு முகாமிட்டு நக்சலைட்டுகளை ஒடுக்கி வருகின்றனர்.
சுக்மா மாவட்டத்தில் உள்ள காலாபத்தர் பகுதியில் புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு சாலை அமைத்து வரும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 74-வது படை பிரிவை சேர்ந்த 99 பேர் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது நக்சலைட்டுகள் நடத்திய அதிரடி தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 25 பேர் பலியானார்கள். இதில் 4 பேர் தமிழர்கள். நக்சலைட்டுகள் நடத்திய இந்த தாக்குதல் சம்பவம் மிகவும் கொடூரமானது. இதனால் நாடே மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளது.
இந்நிலையில், சுக்மா நக்ஸல் தாக்குதலில் 25 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அளவுக்கு அதிகமான சோகத்துடன் இந்த சம்பவம் பாடம் கற்பித்துள்ளது. இந்த கொடூர தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கி அதிபர் தய்யிப் எர்டோகன் இரண்டு நாள் பயணமாக வருகின்ற ஏப்ரல் 30-ம் தேதி இந்தியா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் நக்சலைட்டுகள் அதிகம் உள்ள பகுதியாகும். இதனால் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சி.ஆர். பி.எப்.) அங்கு முகாமிட்டு நக்சலைட்டுகளை ஒடுக்கி வருகின்றனர்.
சுக்மா மாவட்டத்தில் உள்ள காலாபத்தர் பகுதியில் புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு சாலை அமைத்து வரும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 74-வது படை பிரிவை சேர்ந்த 99 பேர் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது நக்சலைட்டுகள் நடத்திய அதிரடி தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 25 பேர் பலியானார்கள். இதில் 4 பேர் தமிழர்கள். நக்சலைட்டுகள் நடத்திய இந்த தாக்குதல் சம்பவம் மிகவும் கொடூரமானது. இதனால் நாடே மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளது.
இந்நிலையில், சுக்மா நக்ஸல் தாக்குதலில் 25 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அளவுக்கு அதிகமான சோகத்துடன் இந்த சம்பவம் பாடம் கற்பித்துள்ளது. இந்த கொடூர தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கி அதிபர் தய்யிப் எர்டோகன் இரண்டு நாள் பயணமாக வருகின்ற ஏப்ரல் 30-ம் தேதி இந்தியா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X