என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் மன்னர்கள் 2 பேர் சுட்டுக்கொலை
Byமாலை மலர்24 April 2017 3:36 AM GMT (Updated: 24 April 2017 3:36 AM GMT)
மெக்சிகோவில் போலீஸ் நடத்திய வேட்டையில் போதை பொருள் கடத்தல் மன்னர்கள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் மன்னர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், மெக்சிகோவின் வடகிழக்கு மாகாணமான தாமாலிபஸ் மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் மன்னனான ஜூலியன் லூய்சா சாலினாஸ் என்ற எல் கமான்தண்டே டோரா பல்லாண்டு காலம் போலீசாரால் தேடப்பட்டு வந்தார். அமெரிக்க எல்லையில் உள்ள ரெய்னோசா நகரில் ஏற்படுகிற கலகங்களுக்கு இவர்தான் முக்கிய காரணமாக திகழ்ந்து வந்தார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், அவர் ரெய்னோசா நகரில் சுற்றி வளைக்கப்பட்டபோது, போலீசாரை நோக்கி சுட்டார். போலீசார் தங்கள் துப்பாக்கிகளால் திருப்பி பதிலடி கொடுத்தனர். இதில் அவர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இதே போன்று மற்றொரு போதைப்பொருள் கடத்தல் மன்னனான பிரான்சிஸ்கோ பாஞ்சோ காரியான், தாமாலிபஸ் மாகாணத்தின் தலைநகர் அருகே சுட்டுக்கொல்லப்பட்டார். இவரும் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் என கூறப்படுகிறது.
அமைப்பு ரீதியிலான குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறவர்களுக்கு எதிராக மெக்சிகோ போலீஸ் நடத்திய வேட்டையில் இந்த போதைப்பொருள் கடத்தல் மன்னர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மெக்சிகோ போலீஸ், டுவிட்டரில் கூறி உள்ளது.
மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் மன்னர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், மெக்சிகோவின் வடகிழக்கு மாகாணமான தாமாலிபஸ் மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் மன்னனான ஜூலியன் லூய்சா சாலினாஸ் என்ற எல் கமான்தண்டே டோரா பல்லாண்டு காலம் போலீசாரால் தேடப்பட்டு வந்தார். அமெரிக்க எல்லையில் உள்ள ரெய்னோசா நகரில் ஏற்படுகிற கலகங்களுக்கு இவர்தான் முக்கிய காரணமாக திகழ்ந்து வந்தார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், அவர் ரெய்னோசா நகரில் சுற்றி வளைக்கப்பட்டபோது, போலீசாரை நோக்கி சுட்டார். போலீசார் தங்கள் துப்பாக்கிகளால் திருப்பி பதிலடி கொடுத்தனர். இதில் அவர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இதே போன்று மற்றொரு போதைப்பொருள் கடத்தல் மன்னனான பிரான்சிஸ்கோ பாஞ்சோ காரியான், தாமாலிபஸ் மாகாணத்தின் தலைநகர் அருகே சுட்டுக்கொல்லப்பட்டார். இவரும் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் என கூறப்படுகிறது.
அமைப்பு ரீதியிலான குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறவர்களுக்கு எதிராக மெக்சிகோ போலீஸ் நடத்திய வேட்டையில் இந்த போதைப்பொருள் கடத்தல் மன்னர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மெக்சிகோ போலீஸ், டுவிட்டரில் கூறி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X