என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிரியா விஷவாயு வெடிகுண்டு தாக்குதல் சகித்துக் கொள்ளவே முடியாதது - அமெரிக்க அதிபர் டிரம்ப்
Byமாலை மலர்5 April 2017 11:39 PM GMT (Updated: 5 April 2017 11:39 PM GMT)
சிரியாவில் நிகழ்த்தப்பட்ட விஷவாயு வெடிகுண்டு தாக்குதல் எந்த நிலையிலும் சகித்துக் கொள்ள முடியாது எனவும், சிரியா மீதான தன்னுடைய பார்வை மாறியுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:
சிரியாவில் நிகழ்த்தப்பட்ட விஷவாயு வெடிகுண்டு தாக்குதல் எந்த நிலையிலும் சகித்துக் கொள்ள முடியாது எனவும், சிரியா மீதான தன்னுடைய பார்வை மாறியுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை குறிவைத்து அரசுக்கு ஆதரவான விமானப்படையின் போர் விமானங்கள் நேற்று முந்தினம் ரசாயன ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தியது. இட்லிப் மாகாணத்தின் மத்திய பகுதியில் உள்ள கான் ஷெய்க்குன் நகரில் போராளிகள் பரவலாக வாழும் பகுதியில் நடத்தப்பட்ட இந்த விஷவாயு தாக்குதலில் 20 குழந்தைகள், பெண்கள் உள்பட 72 பேர் உயிரிழந்ததாக மேற்கத்திய ஊடகங்கள் குறிப்பிட்டு வருகின்றன
குளோரின் விஷ வாயுவை பீப்பாயில் அடைத்து சிரிய ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் வீசியதாக இந்த தாக்குதல் தொடர்பாக ஐ.நா. சபை பிரதிநிதிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஷெய்க்குன் நகரில் போராளிகள் தங்கியிருந்த இடத்தின்மீது தங்கள் நாட்டு விமானப் படை சாதாரண ரக குண்டுகளையே வீசியதாகவும், குண்டு வீச்சின்போது போராளிகள் பதுக்கி வைத்திருந்த ரசாயன ஆயுதங்கள் வெடித்து சிதறியதால் பொதுமக்கள் உயிரிழந்ததாகவும் சிரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
விஷவாயு வெடிகுண்டுதாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளின் புகைப்படங்கள் உலகை உலுக்கியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அரசு முறைப் பயணமாக அமெரிக்கா வந்துள்ள ஹோர்டான் மன்னர் உடனான சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் ,” சிரியாவில் நிகழ்ந்தது மிகவும் கொடூரமானது. எந்த வகையிலும் சகித்துக் கொள்ள முடியாதது. இது எல்லை மீறிய தாக்குதல். குறிப்பாக பலியான குழந்தைகளின் புகைப்படங்கள் என்னை வெகுவாக பாதித்ததுள்ளது. சிரியா மீதும் சிரிய அதிபரின் மீதான எனது பார்வையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிஞ்சுக் குழந்தைகள் மீதான விஷவாயு வெடிகுண்டு தாக்குதல் துளியும் மனிதநேயம் இல்லாதது.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “ பாதிக்கப்பட்ட மக்களுடன் அமெரிக்கா மற்றும் எங்கள் கூட்டணி நாடுகள் உறுதுணையாக நிற்கும். நடந்த இந்தச் சம்பவத்திற்கு உலகளாவிய கண்டனத்தை அமெரிக்கா பதிவு செய்கிறது. ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினரை முற்றிலுமாக அழித்து பொதுமக்களை பாதுகாப்பதே எங்களது தலையாய பணி” எனவும் அவர் கூறினார்.
சிரியாவில் நிகழ்த்தப்பட்ட விஷவாயு வெடிகுண்டு தாக்குதல் எந்த நிலையிலும் சகித்துக் கொள்ள முடியாது எனவும், சிரியா மீதான தன்னுடைய பார்வை மாறியுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை குறிவைத்து அரசுக்கு ஆதரவான விமானப்படையின் போர் விமானங்கள் நேற்று முந்தினம் ரசாயன ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தியது. இட்லிப் மாகாணத்தின் மத்திய பகுதியில் உள்ள கான் ஷெய்க்குன் நகரில் போராளிகள் பரவலாக வாழும் பகுதியில் நடத்தப்பட்ட இந்த விஷவாயு தாக்குதலில் 20 குழந்தைகள், பெண்கள் உள்பட 72 பேர் உயிரிழந்ததாக மேற்கத்திய ஊடகங்கள் குறிப்பிட்டு வருகின்றன
குளோரின் விஷ வாயுவை பீப்பாயில் அடைத்து சிரிய ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் வீசியதாக இந்த தாக்குதல் தொடர்பாக ஐ.நா. சபை பிரதிநிதிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஷெய்க்குன் நகரில் போராளிகள் தங்கியிருந்த இடத்தின்மீது தங்கள் நாட்டு விமானப் படை சாதாரண ரக குண்டுகளையே வீசியதாகவும், குண்டு வீச்சின்போது போராளிகள் பதுக்கி வைத்திருந்த ரசாயன ஆயுதங்கள் வெடித்து சிதறியதால் பொதுமக்கள் உயிரிழந்ததாகவும் சிரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
விஷவாயு வெடிகுண்டுதாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளின் புகைப்படங்கள் உலகை உலுக்கியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அரசு முறைப் பயணமாக அமெரிக்கா வந்துள்ள ஹோர்டான் மன்னர் உடனான சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் ,” சிரியாவில் நிகழ்ந்தது மிகவும் கொடூரமானது. எந்த வகையிலும் சகித்துக் கொள்ள முடியாதது. இது எல்லை மீறிய தாக்குதல். குறிப்பாக பலியான குழந்தைகளின் புகைப்படங்கள் என்னை வெகுவாக பாதித்ததுள்ளது. சிரியா மீதும் சிரிய அதிபரின் மீதான எனது பார்வையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிஞ்சுக் குழந்தைகள் மீதான விஷவாயு வெடிகுண்டு தாக்குதல் துளியும் மனிதநேயம் இல்லாதது.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “ பாதிக்கப்பட்ட மக்களுடன் அமெரிக்கா மற்றும் எங்கள் கூட்டணி நாடுகள் உறுதுணையாக நிற்கும். நடந்த இந்தச் சம்பவத்திற்கு உலகளாவிய கண்டனத்தை அமெரிக்கா பதிவு செய்கிறது. ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினரை முற்றிலுமாக அழித்து பொதுமக்களை பாதுகாப்பதே எங்களது தலையாய பணி” எனவும் அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X