என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் தாறுமாறாக ஓடிய வேன் மோதி இந்திய என்ஜினீயர் மரணம்
Byமாலை மலர்30 March 2017 6:57 AM GMT (Updated: 30 March 2017 6:57 AM GMT)
அமெரிக்காவில் தாறுமாறாக ஓடிய வேன் மோதி இந்திய என்ஜினீயர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய மனைவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நியூயார்க்:
அமெரிக்காவில் இன்டியானா மாகாணம் கொலம்பஸ் நகரில் உள்ள டீசல் என்ஜின் நிறுவனத்தில் இந்தியாவை சேர்ந்த அன்சுல் சர்மா (வயது 30) என்பவர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.
அவர் தனது மனைவி ஷமீரா (28)வுடன் பர்த் லோமி என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது தாறுமாறாக ஓடி வந்த மினி வேன் ஒன்று அவர்கள் மீது மோதியது. இதில், அன்சுல் சர்மா அந்த இடத்திலேயே உயிர் இழந்தார். ஷமீரா படுகாயம் அடைந்தார். அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். மிகவும் ஆபத்தான நிலையில் தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர்கள் மீது மோதிய வேன் நிற்காமல் சென்று விட்டது. போலீசார் விரட்டி சென்று அந்த வேனை மடக்கி பிடித்தனர். வேனை ஓட்டி வந்த மைக்கேல் டேமியா (38) என்பவரை கைது செய்தனர்.
இறந்த அன்சுல் சர்மாவின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர அவருடைய உறவினர்கள் தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
அமெரிக்காவில் இன்டியானா மாகாணம் கொலம்பஸ் நகரில் உள்ள டீசல் என்ஜின் நிறுவனத்தில் இந்தியாவை சேர்ந்த அன்சுல் சர்மா (வயது 30) என்பவர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.
அவர் தனது மனைவி ஷமீரா (28)வுடன் பர்த் லோமி என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது தாறுமாறாக ஓடி வந்த மினி வேன் ஒன்று அவர்கள் மீது மோதியது. இதில், அன்சுல் சர்மா அந்த இடத்திலேயே உயிர் இழந்தார். ஷமீரா படுகாயம் அடைந்தார். அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். மிகவும் ஆபத்தான நிலையில் தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர்கள் மீது மோதிய வேன் நிற்காமல் சென்று விட்டது. போலீசார் விரட்டி சென்று அந்த வேனை மடக்கி பிடித்தனர். வேனை ஓட்டி வந்த மைக்கேல் டேமியா (38) என்பவரை கைது செய்தனர்.
இறந்த அன்சுல் சர்மாவின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர அவருடைய உறவினர்கள் தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X