என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மெக்சிக்கோ: சிறை கலவரத்தில் இருவர் பலி - பலர் படுகாயம்
Byமாலை மலர்29 March 2017 8:18 AM GMT (Updated: 29 March 2017 8:18 AM GMT)
மெக்சிக்கோ நாட்டின் வடபகுதியில் உள்ள சிறையில் கைதிகளிடையே மூண்ட கலவரத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மெக்சிக்கோ சிட்டி:
மெக்சிக்கோ நாட்டின் வடக்கே இருக்கும் மான்ட்டர்ரே நகரில் கேடேரேட்டா கிளைச் சிறையில் நேற்று முன்தினத்தில் இருந்து கைதிகள் ரகளையிலும், கலவரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிறையில் உள்ள மருந்தகத்தை நேற்று முற்றுகையிட்ட சுமார் 50 கைதிகள் அங்கிருந்த பொருட்களை அடித்து, உடைத்து சூறையாடினர். அவர்களை கட்டுப்படுத்த சிறை காவலர்கள் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். 13 கைதிகள் படுகாயமடைந்தனர்.
இதேபோல், அருகாமையில் உள்ள டமாலிப்பஸ் மாநிலத்தில் உள்ள இன்னொரு சிறையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலவரத்தில் மூன்று கைதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும், டோப்போ சிக்கோ சிறையில் கைதிகளில் இரு பிரிவினரிடையே கடந்த ஆண்டு நடைபெற்ற மிகப் பெரிய கலவரம் மற்றும் கோஷ்டி மோதலில் 49 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மெக்சிக்கோ நாட்டின் வடக்கே இருக்கும் மான்ட்டர்ரே நகரில் கேடேரேட்டா கிளைச் சிறையில் நேற்று முன்தினத்தில் இருந்து கைதிகள் ரகளையிலும், கலவரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிறையில் உள்ள மருந்தகத்தை நேற்று முற்றுகையிட்ட சுமார் 50 கைதிகள் அங்கிருந்த பொருட்களை அடித்து, உடைத்து சூறையாடினர். அவர்களை கட்டுப்படுத்த சிறை காவலர்கள் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். 13 கைதிகள் படுகாயமடைந்தனர்.
இதேபோல், அருகாமையில் உள்ள டமாலிப்பஸ் மாநிலத்தில் உள்ள இன்னொரு சிறையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலவரத்தில் மூன்று கைதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும், டோப்போ சிக்கோ சிறையில் கைதிகளில் இரு பிரிவினரிடையே கடந்த ஆண்டு நடைபெற்ற மிகப் பெரிய கலவரம் மற்றும் கோஷ்டி மோதலில் 49 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X