என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எல்லை கடந்து மீன்பிடித்ததாக 100 இந்திய மீனவர்களை கைது செய்த பாகிஸ்தான்
Byமாலை மலர்26 March 2017 6:59 PM GMT (Updated: 26 March 2017 6:59 PM GMT)
இந்திய கடல்பகுதி எல்லையை கடந்து மீன் பிடித்ததாக சுமார் 100 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கைது செய்துள்ளது. மேலும் மீனவர்களிடம் இருந்து படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கராச்சி:
இந்தியை எல்லையை கடந்து மீன்படித்ததாக சுமார் 100 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கைது செய்து, மீனவர்களிடம் இருந்து 19 படகுகளை கைப்பற்றப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய மீனவர்களை கட்ச் மாவட்டத்தை சேர்ந்த ஜகாவ் துறைமுகம் அருகே பாகிஸ்தான் கடற்பகுதி பாதுகாப்பு நிறுவன அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்திய மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் விசாரணைக்காக மாவட்ட போலீசாரிடம் வழங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்கள் விரைவில் சிறையில் அடைக்கப்படுவர் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக இதே மாதத்தில் பாகிஸ்தான் அதிகாரிகள் சுமார் 115 இந்திய மீனவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 19 படகுகளை பறிமுதல் செய்தனர். எனினும் சமீபத்தில் இந்திய கடற்படையினர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களை கைது செய்து அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்ததை தொடர்ந்து இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கைது சம்பவங்கள் இரு தரப்பிலும் நடைபெற்று வந்த போதும், நல்லிணக்க அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். அதன் படி ஜனவரி 5 ஆம் தேதி சுமார் 219 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுவித்தது.
இந்தியை எல்லையை கடந்து மீன்படித்ததாக சுமார் 100 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கைது செய்து, மீனவர்களிடம் இருந்து 19 படகுகளை கைப்பற்றப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய மீனவர்களை கட்ச் மாவட்டத்தை சேர்ந்த ஜகாவ் துறைமுகம் அருகே பாகிஸ்தான் கடற்பகுதி பாதுகாப்பு நிறுவன அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்திய மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் விசாரணைக்காக மாவட்ட போலீசாரிடம் வழங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்கள் விரைவில் சிறையில் அடைக்கப்படுவர் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக இதே மாதத்தில் பாகிஸ்தான் அதிகாரிகள் சுமார் 115 இந்திய மீனவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 19 படகுகளை பறிமுதல் செய்தனர். எனினும் சமீபத்தில் இந்திய கடற்படையினர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களை கைது செய்து அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்ததை தொடர்ந்து இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கைது சம்பவங்கள் இரு தரப்பிலும் நடைபெற்று வந்த போதும், நல்லிணக்க அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். அதன் படி ஜனவரி 5 ஆம் தேதி சுமார் 219 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுவித்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X