என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்கா: இரவு விடுதியில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் பலி
Byமாலை மலர்26 March 2017 12:37 PM GMT (Updated: 26 March 2017 12:37 PM GMT)
அமெரிக்காவில் இரவு விடுதி ஒன்றில் இன்று அதிகாலை நுழைந்த மர்மநபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலியானார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் சின்சினாட்டி நகரில் உள்ள இரவு விடுதி ஒன்றில் வார விடுமுறை தினம் என்பதால் அதிகமானோர் குவிந்திருந்தனர். அதிகாலை நேரத்தில் அங்கு நுழைந்த மர்ம நபர் ஒருவர் தான் கொண்டு வந்த துப்பாக்கியால் கண்மூடித் தனமாக தாக்குதல் நடத்தினார்.
இந்த திடீர் தாக்குதலில் விடுதியில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும், அங்கு கூடியிருந்த பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் விஸ்கான்சின் மாகாணத்தில் வங்கி உள்ளே புகுந்த மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் போலிசார் உள்ளிட்ட 4 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி கலாச்சாரம் பெருகியுள்ளது அந்நாட்டு மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் சின்சினாட்டி நகரில் உள்ள இரவு விடுதி ஒன்றில் வார விடுமுறை தினம் என்பதால் அதிகமானோர் குவிந்திருந்தனர். அதிகாலை நேரத்தில் அங்கு நுழைந்த மர்ம நபர் ஒருவர் தான் கொண்டு வந்த துப்பாக்கியால் கண்மூடித் தனமாக தாக்குதல் நடத்தினார்.
இந்த திடீர் தாக்குதலில் விடுதியில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும், அங்கு கூடியிருந்த பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் விஸ்கான்சின் மாகாணத்தில் வங்கி உள்ளே புகுந்த மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் போலிசார் உள்ளிட்ட 4 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி கலாச்சாரம் பெருகியுள்ளது அந்நாட்டு மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X