என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஷ்யாவில் கடும் துப்பாக்கி சண்டை: 6 கிளர்ச்சியாளர்கள், 6 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
Byமாலை மலர்25 March 2017 11:46 AM GMT (Updated: 25 March 2017 11:46 AM GMT)
ரஷ்யாவின் வடக்கு காகசஸ் பகுதியில் கிளர்ச்சியாளர்களுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 6 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். 6 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.
மாஸ்கோ:
ரஷ்யாவின் வடக்கு காகசஸ் பிராந்தியத்தில் பல ஆண்டுகளாக அரசுக்கு எதிரான புரட்சி நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. இதேபோல் செசன்யாவிலும் வன்முறை மோதல்கள் ஏற்படுகின்றன.
கிளர்ச்சியாளர்களில் ஒரு பிரிவினர் ஆயுதம் ஏந்தி ரஷ்ய படையினரை தாக்கி வருகின்றனர். எனவே, வடக்கு காகசஸ் மற்றும் செசன்யா பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக செசன்யாவில் கடந்த ஆண்டு தேசிய பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டது.
இந்நிலையில், செசன்யாவில் உள்ள தேசிய பாதுகாப்பு படை முகாமினை தகர்க்கும் முயற்சியில் கிளர்ச்சியாளர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு ராணுவமும் பதிலடி கொடுத்தது. இரு தரப்பிற்கிடையே நேற்று நடந்த கடும் துப்பாக்கி சண்டையில் ராணுவம் தரப்பில் 6 பேரும், கிளர்ச்சியாளர்கள் தரப்பில் 6 பேரும் உயிரிழந்தனர்.
கடும் மூடுபனியால் ஏற்பட்ட சீரற்ற காலநிலையை பயன்படுத்தி கிளர்ச்சியாளர்கள் ஊடுருவி தாக்குதலை நடத்தியிருப்பதாக தேசிய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் வடக்கு காகசஸ் பிராந்தியத்தில் பல ஆண்டுகளாக அரசுக்கு எதிரான புரட்சி நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. இதேபோல் செசன்யாவிலும் வன்முறை மோதல்கள் ஏற்படுகின்றன.
கிளர்ச்சியாளர்களில் ஒரு பிரிவினர் ஆயுதம் ஏந்தி ரஷ்ய படையினரை தாக்கி வருகின்றனர். எனவே, வடக்கு காகசஸ் மற்றும் செசன்யா பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக செசன்யாவில் கடந்த ஆண்டு தேசிய பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டது.
இந்நிலையில், செசன்யாவில் உள்ள தேசிய பாதுகாப்பு படை முகாமினை தகர்க்கும் முயற்சியில் கிளர்ச்சியாளர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு ராணுவமும் பதிலடி கொடுத்தது. இரு தரப்பிற்கிடையே நேற்று நடந்த கடும் துப்பாக்கி சண்டையில் ராணுவம் தரப்பில் 6 பேரும், கிளர்ச்சியாளர்கள் தரப்பில் 6 பேரும் உயிரிழந்தனர்.
கடும் மூடுபனியால் ஏற்பட்ட சீரற்ற காலநிலையை பயன்படுத்தி கிளர்ச்சியாளர்கள் ஊடுருவி தாக்குதலை நடத்தியிருப்பதாக தேசிய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X