என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிரியா: சிறைச்சாலை மீது போர் விமானங்கள் குண்டு வீச்சு - 16 பேர் பலி
Byமாலை மலர்25 March 2017 10:38 AM GMT (Updated: 25 March 2017 10:38 AM GMT)
உள்நாட்டுப் போர் மற்றும் ஐ.எஸ். தீவிராதிகளின் ஆதிக்கத்தால் சிக்கித் தவிக்கும் சிரியா நாட்டின் இட்லிப் மாகாணத்தில் உள்ள சிறைச்சாலை மீது போர் விமானங்கள் நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர்.
டமாஸ்கஸ்:
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர்.
இதுதவிர, ஐ.எஸ். தீவிரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.
இந்நிலையில், சிரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள சிறைச்சாலை மீது நேற்றிரவு அந்நாடு விமானப் படைகள் நடத்திய குண்டு வீச்சில் சிறை அதிகாரிகள் இருவர் உள்பட மொத்தம் 16 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குண்டு வீச்சுக்கு பிறகு சிறையில் இருந்து தப்பியோட முயன்ற சிலரை சிறைக் காவலர்கள் சுட்டுக் கொன்றதால் இந்த உயிர் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளதாகவும் அந்த செய்திகள் குறிப்பிட்டுகின்றன.
குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர்.
இதுதவிர, ஐ.எஸ். தீவிரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.
இந்நிலையில், சிரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள சிறைச்சாலை மீது நேற்றிரவு அந்நாடு விமானப் படைகள் நடத்திய குண்டு வீச்சில் சிறை அதிகாரிகள் இருவர் உள்பட மொத்தம் 16 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குண்டு வீச்சுக்கு பிறகு சிறையில் இருந்து தப்பியோட முயன்ற சிலரை சிறைக் காவலர்கள் சுட்டுக் கொன்றதால் இந்த உயிர் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளதாகவும் அந்த செய்திகள் குறிப்பிட்டுகின்றன.
குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X